Sep 6, 2016

அலெப்போவின் விளக்கம் தரும் தருணம்

2012 ல் சிரியாவின் பொருளாதார மற்றும் வர்த்தக நகரத்தை புரடசி படைகள் வெற்றி பெற்று கைப்பற்றியது, இத்தருணத்தில் அது ஒரு தூரத்து கனவாக இருக்கின்றது. அலெப்போ மாகானத்தின் பெரும் பகுதியையும் அதே பெயரை கொண்ட அதன் தலைநகரத்தையும் கைப்பற்றியது அசாதிற்கு மாற்று சக்தியாக விளங்கும் ஒரு எதிர்ப்பை நிறுவ எதிர்ப்பாளர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. இது மேலும் அரசாங்கத்தின் பின்னடைவை வேகப்படுத்தியுள்ளதோடு அதன் வசமிருந்த பகுதிகளை இழக்க செய்துள்ளது இதன் காரணத்தா் அல்-அசாத் சிரியாவின் வட பகுதியை மீளும் முயற்சியை கைவிடும் நிலையை ஏற்படுத்தியது. ஆனால் இன்று இந்நாட்டில் நடைபெற்று வரும் போர்களில், அலெப்போவிற்கான போரே மிகப்பெரியதும் மற்றும் வெற்றியை முடிவு செய்யும் ஆற்றலுடைய உறுதியான போராகும் அது இப்போது விளக்கும் தருணத்தை அடையும் நிலையை எட்டியுள்ளது. அசாத் மற்றும் புரட்சியாளர்கள் இவ்விரு தரப்பினரும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளனர் ஒரு தீர்க்கமான ராணுவ வெற்றியின் மூலம் அசாத் தனது நிலையை உறுதி படுத்த விழைகிறார். அதே வேளையில் புரட்சியாளர்கள் தங்களது நோக்கம் நிலைத்திருக்க போராடுகிறார்கள். ஒரு வேளை அலெப்போவை இழந்து விட்டால் அதன் பிறகு அல்-அசாதிற்கு எதிராக எந்தவொரு ராணுவ வெற்றியை பெறுவது என்பது புரட்சியாளர்களுக்கும் சிரிய மக்களுக்கும் ஒரு நெடிய கனவாக ஆக்கிவிடும். அதே சமயம் அல்-அசாதிற்கு 10 மாதத்திற்கு முன்பு கவிழும் நிலையிலிருந்த தனது ஆட்சிக்கு புத்துயிர் ஊட்டியது போல் ஆகிவிடும்.


2016 ஜூலை 17ம் நாள் அன்று அசாதின் படைகள், ஈரானிய படைகள், ஹிஸ்புல்லாவின் வீரர்கள் ரஷ்ய விமானப்படை மற்றும் இதர புரட்சிப்படைகளின் உதவியோடு புரட்சியாளர்களின் கட்டுப்படாட்டில் இருந்த அலெப்போவின் கிழக்கு பகுதியில் இருக்கும் கடைசி தொடர்பு சாலையான கேஸ்டெலோ சாலையை தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர் இச்சாலை 2012ம் ஆண்டு முதல் புரட்சியீளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதுவே ஆயுதங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை கொண்டு செல்ல மீதமிருந்த ஒரூ பாதையாகும்.[1] அல்-அசாதின் படைகள் இப்போது புரட்சியாளர்கள் கடைசியாக தங்கள் கைவசம் வைத்திருந்த பலம் பொருந்திய பகுதயான அலெப்போ நகரத்தின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டு சுற்றி வளைத்துள்ளனர், அந்த மக்களுக்கு உணவு கிடைக்காமல் செய்தும் அவர்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தும் செயலை செய்து அவர்களை தண்டிக்க ஆரம்பித்துள்ளனர். அலெப்போ நகரத்ரிற்கு எதிரான அல்-அசாதின் ராணுவ நடவடிக்கை 2015 அக்டோபர் மாதம் தொடங்கியது இது ரஷ்ய தலையீடு நிறுத்தப்பட்ட பின்னரும் லட்டாக்கியா மற்றும் இத்லிபிலிருந்து புரட்சியாளர்களை பின்னோக்கி செலுத்தியதை அடுத்து நிகழ்ந்தது. ரஷ்ய ஆகாய சக்தி மற்றும் ஈரானிய தலைமை மற்றும் ஷிஆ புரட்சிப்படைகளின் உதவியை கொண்டு அலெப்போ மற்றும் இத்லிப் மாகாணங்களில் பன்முனை தாக்குதல் நடத்தியதில் எதிரணியினரை குழப்பத்தில் ஆழ்த்தியதோடு அவர்களை அளவுக்கு அதிகமாக தங்களது எல்லைகளுக்கு அப்பால் இழுக்க முடிந்தது. எதிர் படையினரை நகரப்பகுதிகளில் இருந்து வெளியேற்றி ஒரு தீர்க்கமான முடிவு தரக்கூடிய நடவடிக்கையை மேற்கொண்டு அந்நகரை சுற்றி வளைக்க சூழ்நிலைகளை தோதுவாக அமைக்கும் விதமாக இந்த நடவடிக்கைகள் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கில் உள்ள அலெப்போ நகரத்தில் உள்ள கிராம பகுதிகளில் நடைபெற்றது. ரஷ்ய விமானப்படையும் ஈரானின் மனித வளமும் பஷார் அல்-அசாத் அலெப்போ நகரத்தை அனைத்து புரத்திலும் முழுமையாக சுற்றி வளைக்க வைத்தது.

சர்வதேச சக்திகள், இவர்கள் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல, இவர்களும் புரட்சியாளர்களை பணிய வைக்க அதே போன்று தாக்குதல் நடத்தி படுகொலைகள் செய்தனர். ஜூலை 18ம் நாள் அமெரிக்க போர் விமானங்கள் மன்பிஜ் நகரத்தை அடுத்து ரத்தம் வழியச்செய்யும் ஒரு படுகொலையை நிகழ்த்தியது, இதில் 20 அப்பாவி குடிமக்கள் உயிரிழந்தனர் மேலும் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் காயம் அடைந்தனர்.[2] அதற்கு அடுத்த நாள் பிரஞ்சு போர் விமானங்கள் நீஸில் நடந்த தாக்குதலுக்கு பழி தீர்க்கும் விதமாக மன்பிஜ் நகரின் வடக்கே உள்ள டவ்கான் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தியது, இந்த உதிரம் வழியும் படுகொலை தாக்குதலில் பெரும்பாலான குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர் சில இடங்களில் மொத்த குடும்ப உறுப்பினர்கள் என 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர்.[3] ஜூலை 23ம் நாள் ரஷ்யாவும் அலெப்போவை சுற்றி பல இடங்களில் வான்வழி தாக்குதல்கள் நடத்தி குழந்தைகள் உட்பட 70 நபர்களை கொன்று குவித்தது. அனைத்து பயங்கர தாக்குதல்களும் பல உயிர்களை பலி கொண்டும், பெருமளவிலான உடமைகள் மற்றும் கட்டிடங்களை சேதப்படுத்தியும் இதன் காரணமாக இடர்பாடுகளுக்கு மத்தியில் சிக்கி இருந்த பிரேதங்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டெடுக்கும் பணியை சிரமமாக்கியது. புரட்சி்ப்படையினரின் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அலெப்போவின் கிழக்கு பகுதியில் அவர்களை சுற்றி வளைத்து அவர்களின் மீது தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

பலதரப்பட்ட எதிராளிகள் மற்றும் புரட்சிப்படையினருடன் அரசு கொண்ட அமைதி ஒப்பந்தம் அலெப்போவில் துவம்சம் செய்வதற்கான ஒரு முன் ஏற்பாடாக அரசு சரியாக பயன்படுத்தி கொண்டது. அனைத்து போர் நிறுத்த ஒப்பந்தங்களும் சிரிய பிரட்சியின் ஆரம்பத்திலிருந்து அரசு அதை பயன்படுத்தி தனது ஆதிக்கத்தை விரிவாக்க செய்தது பின்பு அந்த ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தங்களை முழுமையாக உதாசீனப்படுத்தியது. ஏப்ரல் 2012ல் நடைபெற்ற கோஃபி அன்னன் போர் நிறுத்த ஒப்பந்தம், அக்டோபர் 2012ல் ஈத் அல்-அழ்ஹாவில் நடைபெற்ற லக்தார் பிராஹிமி போர் நிறுத்த ஒப்பந்தம், ஜனவரி 2014ல் நடைபெற்ற பர்ஃஜா சுற்றுவட்டார போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் செப்டம்பர் 2014ல் நடைபெற்ற காபூன் சுற்றுவட்டார போர் நிறுத்த ஒப்பந்தம் போன்று 2011லிருந்து அல்-அசாத் பல்வேறு போர் நிறுத்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு பின்பு அதை மீறி உள்ளார். ஜபாதானி போர் நிறுத்த ஒப்பந்தமானது அதில் கையொப்பமிட்டவர்கள் அங்கிருந்து வெளியேறி இத்லிபிற்கு செல்ல வேண்டும் என்று நிபந்தனை கொண்டிருந்தது மற்றும் அல்-வார் போர் நிறுத்த ஒப்பந்தமும் அவர்களை இத்லிபிற்கு செல்ல வேண்டும் என்கிற நிபந்தனை கொண்டிருந்தது. இதேபோல் ஃஜபாதானி மற்றும் மதாயா போர் நிறுத்த ஒப்பந்தங்களின் படி மக்கள் இத்லிபிற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. டிசாம்பர் 2015ல் நடைபெற்ற அல்-வார் போர் நிறுத்த ஒப்பந்தம், எதிர்ப்பாளர்களின் துப்பாக்கி ஏந்திய வீரர்களை அந்த சுற்றுவட்டாரத்தில் இருந்து வெளியேறி இத்லிப் நோக்கி செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதக்கப்பட்டது, இதன் மூலம் ஹோம்சில் சண்டையிடுவதை நிறுத்தி புரட்சியின் தொட்டிலை முழுமையாக மீண்டும் அசாதிடம் ஒப்படைக்கும் விதமாக இருந்தது. எதிர்ப்பாளர்கள் மற்றும் பல அமைப்புகள் இத்லிபில் இருந்த காரணத்தினால் இந்த பகுதியில் ரஷ்ய விமானப்படைகளால் பலமாக தாக்கப்பட்டு அல்-அசாத் அரசு அந்த புரட்சியாளர்களுக்கு மரண அடி கொடுக்கவும் அலெப்பாவிற்கான பாதையை திறந்து வைக்கவும் வழிவகை செய்தது, இதன் மூலம் அரசை அந்த மக்களை சுற்றி வளைக்க செய்தது. இந்த அமைதி ஒப்பந்தம் என்பது புரட்சியாளர்கள் தரப்பிலிருந்து நிகழ்ந்தப்பட்ட ஒரு பெரிய தவறாகும் இது இறுதியில் அரசுக்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது.

ஜூலை 31ம் தேதி கிட்டத்தட்ட 20 பெரிய புரடசி குழுவினர், அலெப்போவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் முற்றுகையை முறிக்கும் எண்ணத்தில் தாக்குதலை தொடங்கினார்கள். அது அதன் நோக்கத்தை இன்னும் அடையவில்லை என்றாலும், இந்த தாக்குதல் ஒரு குறிப்பிட்ட முன்னேற்றத்தை அடைந்துள்ளது மேலும் இதன் மூலம் போராட்டக்குழுவினர் இடையே உள்ளுக்குள் ஒற்றுமையாக இருப்பது இன்றியமையாதது என்ற கண்ணோட்டத்தை உறுதிபடுத்தும். அனால் வெளிப்புற உதவி இல்லாதது கூடுதல் படைகள் இல்லாதது அலெப்போவில் தங்கள் உயிருக்காக போராடுபவர்கள் அந்த கணக்கிடும் தருணத்தை அடைவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றது. சில அமைப்புகள் துருக்கி, சவூதி அரேபியா, கத்தர் மற்றும் அமெரிக்காவிடம் இருந்தும் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவிகள் பெற்றிருந்தாலும் இந்த உதவிகள் அரசுக்கு எதிரான போரில் ஒரு நல்ல மாற்றத்தை தரக்கூடிய அளவிலான ஆயுத உதவி அவர்களுக்கு ஒருபோதும் வழங்கப்படவில்லை. புரட்சியாளர்களின் தற்காப்பை பலவீனப்படுத்துவதிலும் அலெப்போவில் தற்பொதைய சுற்றி வளைப்பிற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ. ம் முக்கிய பங்கு வகித்தது. புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அலெப்போவை கைப்பற்றவும் இத்லிபில் முன்னேற்றம் அடையவும் ஐ.எஸ்.ஐ.எஸ். பலமுறை முயன்றது. அதில் ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்ந்து தோற்றிருந்தாலும் புரட்சியாளர்களுக்கு இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டிருந்தது, 7000 வீரர்களை அது இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.[4] சிரியாவின் வட பகுதியில் உள்ள போராட்ட குழுவினர் கிழக்கிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஸின் தாக்குதலையும், தெற்கிலருந்து நடத்தப்படும் அரசின் தாக்குதல்களையும் மற்றும் நாட்டின் அனைத்து திசையிலிருந்து ஈரானிய புரட்சிப்படையினருடன் சேர்ந்து ரஷ்யா தொடுக்கும் தாக்குதல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது இங்கு நடத்தப்பட்ட முற்றுகையின் காரணமாக ஒரு மாதம் காலம் தொடர்ந்து நடந்த போரினால் அவர்களின் தாக்குதல் திறனில் பலவீனத்தை ஏற்படுத்தியது.

அலெப்போவிற்கான போராட்டம் மற்றும் அதன் விளைவு சிரிய புரட்சியில் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். அல்-அசாதின் படைகள் கடந்த 5 ஆண்டுகளில் பல நகரங்களை கைப்பற்றியுள்ளது, ஆனால் அதற்கு அந்நகரங்களை தக்க வைத்துக்கொள்ளவதை விட அதற்கு அந்நகரங்களை கைப்படுத்துவது எளிதாக இருந்தது மேலும் அது கைப்பற்றிய அலெப்போ நகரை தக்கவைத்துக் கொள்ள அதற்கு ஒரு நகரத்தில் பிரச்சினை இருப்பது அதற்கு தேவை படுகிறது, அது புரட்சியாளர்களை வலுப்படுத்துவதற்காக வேண்டி பாடுபடும. இந்த புரட்சி ரஷ்யாவில் நடந்தது போன்று ஸ்டாலின்கார்ட் stalinguard தருணத்தை அடைந்துள்ள காரணத்தால் அலெப்போவிற்கான போராட்டம் நிச்சயமாக சிரியாவிலுள்ள மக்கள் ஒரு உண்மையான மாற்றத்தை கோரும் வண்ணம் நிச்சயமாக ஒரு தீர்வை தரும் வண்ணம் அமைந்திருக்கும்.

Reference : http://www.revolutionobserver.com/2016/08/aleppos-moment-of-reckoning.html



http://sindhanai.org/

No comments:

Post a Comment