Jun 21, 2014

இஸ்லாமிய அரசியல் கண்ணோட்டதை நிர்மாணித்தல்


அரபு எழுச்சியும் (Arab spring) அதனையடுத்து ஆட்சியை பிடித்த அமைப்புகள் கண்ட தோல்விகளும் பல அரசியல் குறைபாடுகள் உள்ளதை வெளிக்காட்டியது. இது கடந்த கால அரசியலை வரலாற்றின் குப்பை தொட்டியில் போட்டுவிட்டு புதிய அரசியல்  எழுவதற்கான நம்பிக்கை தோன்றியிருக்கிறது. எனினும் அதிகாரத்தை கைப்பற்றிய இஸ்லாமிய குழுக்கள் தற்போது நிலவிவரும் அரசியல் அமைப்பை தற்காத்து கொள்ள தங்களுடைய சக்திக்கு  உட்பட்டு இஸ்லாமிய அரசியல் எப்போதும் எழுந்துவிடாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் செய்துவருகின்றனர்.
இஸ்லாமிய அரசியல் சிந்தனை என்றால் என்ன?
முஸ்லிம் உம்மா இன்றைய சூழலில் அரசியல் மற்றும் இஸ்லாம் பற்றிய புரிந்துணர்வை கொண்டிருப்பது அவசியமாகும்.உலகின் அரசியல் நிகழ்வுகள் பற்றிய பார்வையில் இஸ்லாம் ஒரு சிறப்பான கண்ணோட்டத்தை வழங்கியிருப்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இஸ்லாமிய அரசியலை தெளிவாக முழுமையான முறையில் எவர் தனதாக்கி கொள்ளவில்லையோ அவரை ஆதரப்பது கூடாது.
إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ
எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை
(அர்-ரஃது, 11)
அரசியல்வாதிகளை உருவாக்குதல்
ஒரு திறன்மிக்க அரசியல்வாதி அரசியலைப்பற்றிய சீரிய சிந்தனை கொண்டிருப்பது அவசியமாகும். அதாவது உலகின் நிகழ்வுகள் மற்றும் நடப்புகளை பற்றிய பார்வையில் அவருக்கு என ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கி அதன் மூலம் அந்நிகழ்வுகள் மற்றும் நடப்புகளை பார்வையிட வேண்டும். அவ்வாறு அவரிடம் தனக்கென ஒரு கண்ணோட்டம்  இல்லாத பட்சத்தில் அடிக்கடி ஏற்படும் முரண்பாடான சூழ்நிலைகளில் பனிமூட்டத்தில் தெளிவில்லாத பார்வை உடையவரை போன்று அவர் குழம்பிப்போவார். அவருடைய குறிக்கோளை  அடையும் ஆற்றலை இழக்கும் நிலைக்கு ஆளாவார். மேலும் அவருடைய அரசியல் நிலை ஒழுங்கற்றதாகவும் மற்றும் முரண்பாடுகள் கொண்டதாகவும் இருக்கும்.
அபு மர்யம் அல்-அஜ்தி அறிவித்ததாக நபி(ஸல்) கூறினார்கள்.
مَنْ وَلاَّهُ اللَّهُ عَزَّ وَجَلَّ شَيْئًا مِنْ أَمْرِ الْمُسْلِمِينَ فَاحْتَجَب دُونَ حَاجَتِهِمْ وَخَلَّتِهِمْ وَفَقْرِهِمُ احْتَجَبَ اللَّهُ عَنْهُ دُونَ حَاجَتِهِ وَخَلَّتِهِ وَفَقْرِهِ
“எவரொருவரை முஸ்லிம்களின் விவகாரங்களுக்கு பொறுப்பாளியாக நியமித்து அதில் அவர் பொடுபோக்காக இருந்து அவர்களின் தேவைகள் மற்றும்  ஏழ்மையை போக்க அக்கறை கொள்ளவில்லையெனில் மறுமை நாளில் அல்லாஹ் இவருடைய விஷயத்தில் கவலையற்றவனாகவும் அவருடைய தேவை மற்றும் ஏழ்மையில் அக்கறை கொள்ளவும் மாட்டான்.”                    (அபூதாவூத் 2948)
மேற்குலகில் குஃப்ஃபாரிய அரசியல்வாதிகள் நிகழ்வுகள் மற்றும் உலக நடப்புகளை பார்வையிட தங்களுக்கென ஒரு பிரத்தியேக கண்ணோட்டத்தை கொண்டுள்ளனர். அவர்கள் முதலாளித்துவம் மற்றும் அதன் அடிப்படையை கொண்ட சிந்தனைகளான மதச்சார்பின்மை, ஜனநாயக கோட்பாடுகள், சுதந்திரம் மற்றும் ஒருவரின் நலனை அடைவதற்கான தேடல் ஆகியவைகளின் அடிப்படையில் அவர்களின் கண்ணோட்டம் அமைந்திருக்கும். அவர்கள் அரசியலில் ஈடுபடும்போது அவர்களின் வெளியுறவு கொள்கை அவர்களது தேச நலனை அடைவது மட்டுமே தங்களது அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்பதை புரிந்துள்ளனர்.அவர்கள் இதர தேசங்களை எவ்வாறு நோக்கவேண்டும் எனவும் அவர்களுடனான உறவில் எதை எதிர்பார்க்க வேண்டும் எனவும் நன்கு புரிந்துள்ளனர். உள்நாட்டில் மக்களின் விவகாரங்களை மேற்கொள்வதில் தங்களுடைய அரசின் பொறுப்புகள் என்ன என்பது பற்றிய விழிப்புணர்வை கொண்டுள்ளனர். தனிமனிதன் எவ்வாறு தன் வாழ்வை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்களின் உரிமைகள் என்ன என்ற சிந்தனையும் அவர்களிடத்தில் உள்ளது. அவர்களது சித்தாந்தம் பற்றிய விழிப்புணர்வு அவர்களிடம் உள்ளது அதை தழுவி உலகத்தை நோக்கிய பார்வையை அதனடிப்படையில் அமைத்து கொள்கின்றனர்.
அவர்கள் அரசியல் வாழ்வில் ஈடுபடும்போது அவர்களுடைய நாட்டில் உள்ள அரசியல் பாரம்பரியத்தின் மூலம் அனுபவம் பெற்று அரசியல் கொள்கைகளை உருவாக்கி கொள்கின்றனர். அவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவும், பலவிதமான சொல்வாக்கு கொண்டவர்களாகவும், சமயத்திற்கு ஏற்றார்போல மாறுபவர்களாகவும், தங்களை நியாயப்படுத்துவதற்கும் அவர்கள் ஊழல் போன்ற விஷயங்களில் ஈடுபட்டால் அதை மறைப்பதற்கு பொய் சொல்லவும் பழகிக் கொள்கின்றனர். அவர்கள் ஒரு விஷயத்தில் தீர்ப்பளிக்கும் போது சரி – தவறு என்னும் அடிப்படையில் அல்லாமல் அவர்களுடைய நலனை எவ்வாறு அது தொடர்புபடுத்துகிறது என்பதை பொறுத்தே அவர்களது தீர்ப்பு அமையும்; நிகழ்வுகளையும் பிறருக்கு சாதகமற்ற நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும்  தன்மையை வளர்த்துக்கொள்வார்கள். அவர்கள் உண்மையில் என்ன உணர்கிறார்களோ அல்லது நினைக்கிறார்களோ அதனடிப்படையில் அல்லாமல் பொதுமக்களிடையே ஒரு குறிப்பிட்ட முகத்தை வெளிக்காட்ட வேண்டும் என்பதை புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் அரசியலைப் பொறுத்தமட்டில் அது காட்டின் சட்டம் எனவும், இன்று நண்பராக இருக்கக்கூடியவர் வேறொரு நாள் எதிரியாக இருக்கக்கூடும் என்பதையும் அறிந்துள்ளனர். இதனடிப்படையில் மேற்கத்திய அரசியல்வாதி நிகழ்வுகள் மற்றும் உலக நடப்புகளை நோக்குவதற்கு தனக்கென ஒரு கோணத்தை ஏற்படுத்திக்கொள்கிறான். மேலும் தனக்கும் தன் நாட்டிற்கும் எவ்வகையான அரசியல் நடவடிக்கை மேற்கொள்வது முக்கியம் என்பதை தீர்மானிக்கிறான்.
இஸ்லாம் மேற்கத்திய அரசியல்வாதி கொண்டுள்ள பல தன்மைகளை கண்டிக்கின்றது. அதேபோல் அரசியலில் ஈடுபடுவதற்கு அவர்கள் அடிப்படையாக கொண்டுள்ள கண்ணோட்டத்தையும் கண்டிக்கின்றது.இஸ்லாம் ஒரு அரசியல்வாதியை அதனுடைய பிரத்தியேக அடிப்படை மற்றும் மதிப்புகளின் அடிப்படையில் உருவாக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. தன்னலன் மட்டுமே அல்லாமல் இஸ்லாம் தன்சார்பற்ற நிலையை வளர்க்கின்றது, ஒரு குறிக்கோளை அடைய இழிவான யுக்திகளை உபயோகப்படுத்துவதற்கு பதிலாக உண்மை நிலையையும் வெளிப்படை நிலையையும் மேற்கொள்ள இஸ்லாம் ஊக்குவிக்கிறது. ஒரு முஸ்லிம் தனக்கு எதை நாடுகிறானோ அதையே தன் சகோதரனுக்கு நாடச் சொல்லி இஸ்லாம் கற்றுத்தருகிறது- மேற்குலகமோ அதிகமாக மற்றவர்களின் நலனை விட தன்னலன் மட்டுமே முக்கியமென கற்றுத்தருகிறது.
முஸ்லிம்களை பொறுத்த வரை, உஸ்மானிய கிலாஃபத்தின் வீழ்ச்சியின் போது இஸ்லாமிய கண்ணோட்டத்தை கொண்ட அரசியல்வாதிகள் அநேகமாக காணாமல் போய்விட்டனர். காலனியாதிக்க இஸ்லாமிய எதிரிகள் முஸ்லிம்களுடைய அரசியல் சிந்தனையில் நஞ்சை விதைத்து அவர்களின் பிரத்யேக அரசியல் கண்ணோட்டத்திலிருந்து அவர்களை திசை திருப்புவதில் வெற்றி கண்டனர். அவர்கள் இஸ்லாத்திற்கு அந்நியமான அரசியல் சிந்தனைகளான தேசியவாதம் போன்றவற்றை அறிமுகப்படுத்தி அதை வேகமாக பரவச்செய்தனர் இதனால் அரேபிய பகுதியை சார்ந்த  முஸ்லிம்கள் இஸ்தான்புல்லை சார்ந்த முஸ்லிம்களை வேற்றுமையுடன் பார்க்க தொடங்கினார்கள். 1924-ல் இஸ்லாமிய அரசு வீழ்த்தப்பட்டதற்கு பிறகு இஸ்லாமிய நிலங்களில் சோசியலிசம் மற்றும் முதலாளித்துவ சிந்தனைகள் ஆதிக்கம் செலுத்தின. அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் அமைப்புகள் இஸ்லாமிய சட்டங்களுக்கு பதிலாக இவ்வரசு அமைப்பின் கீழ் செயலாற்றியதால் இஸ்லாமிய சட்டங்கள் முழுமையாக செயலிழந்து வெறும் ஒரு உபகரண்மாக மட்டுமே உபயோகிக்கப்பட்டது. அவர்களுடைய அரசியல் கண்ணோட்டமானது இஸ்லாத்திற்கு மாறுபட்டதாகும்; அதை நாம் இன்று கண்கூடாக காணலாம். அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதே அவர்களின் அடிப்படை கவலையாக இருக்கின்றது.
கடந்த நூற்றாண்டில் முஸ்லிம் நிலங்களில் அரசியலில் ஈடுபட்டவர்களான முஸ்தபா கமால், முஹம்மத் அலி ஜின்னா, ஜமால் அப்துல் நாசர், அன்வர் சத்தாத், ஜோர்டான் மன்னர் ஹுசைன், யாசர் அராபத், சதாம் ஹுசைன், நவாஸ் ஷரீஃப், பர்வேஸ் முஷாரஃப் மற்றும் பேநசிர் பூட்டோ போன்றோர் இவர்களில் அடங்குவர். இவர்கள் அனைவரும்  இஸ்லாமிய அரசியலை தங்களிடமிருந்து வெகு தொலைவில் வைத்து தங்கள் மக்களின் நலனுக்காக அல்லாமல் மேற்கத்திய சக்திகளின் நலனுக்காக பாடுபடுவதையே தங்கள் குறிக்கோளாக வைத்திருந்தனர். ஜமால் அப்துல் நாசர் போன்றோர் தங்களது தேசத்தை உருவகப்படுத்துகையில்  மிகவும் பலவீனமான அடிப்படையை கொண்ட அரபு தேசியவாதத்தை மையமாக வைத்து தங்களது தேசங்களை உருவாக்க முயன்றனர்.அனைவரும் மேற்கத்திய நாடுகளால் மேற்கத்திய கோட்பாடுகளின் அடிப்படை மூலம் நிறுவப்பட்ட அரசியல் அமைப்பில் ஈடுபட்டனர். இந்த காரணத்தால் இந்த அமைப்பை கொண்ட அரசு மற்றும் அரசியல் அமைப்பில் உள்ள ஒருவர் முஸ்லிம்களுக்கு எந்தவொரு நன்மையையும் செய்ய இயலாது. காலனியாதிக்கவாதிகள் முஸ்லிம் அரசியல்வாதிகளை தங்களுடைய கைக்கூலிகலாக ஆக்கி தங்களின் கோணத்தில் என்றென்றும் நிலைக்கொண்டு இருக்கவும் அவர்களின் வளங்களை சுருட்டுவதையுமே விரும்புகின்றன.
இதன் காரணமாக முஸ்லிம்களை கொண்ட ஒரு குழு இஸ்லாத்தை வாழ்வியல் வழியாக்க் கொண்ட ஒரு சித்தாந்தமாக ஏற்று முஸ்லிம்களுக்கு மத்தியில் மீண்டும் ஓர் அரசியல் கட்டத்தை நிலைபெறுமாறும் அதைக் கொண்டு உம்மத்தின் வீழ்ச்சியிலிருந்து திருப்ப அவர்களை பண்படுத்த தொடங்கினர்.
இந்த இஸ்லாமிய பண்படுத்தலின் விளைவை நாம் முஸ்லிம் உலகின் அனைத்து பகுதிகளிலும் மேலும் அதனையும் தாண்டி இப்போது காணலாம். எனினும் கிலாஃபா இன்னும் நிறுவப்படாததன் காரணத்தால் உண்மையான அரசியல் அனுபவம் பெறுவதில் குறைவு உள்ளதை காணமுடிகிறது. முஸ்லிம்களை பொறுத்தவரையில் அரசியல் என்பது அதிகாரத்தில் இல்லாதபோது அரசின் குறைகளை எடுத்துரைப்பதும் ஆட்சியில் இருக்கும் போது உள்நாட்டு அளவிலும் சர்வதேச அளவிலும் உம்மத்தின் விவகாரங்களை கவனித்து கொள்வதுமாகும். அவ்வாறு இஸ்லாமிய நாடு இல்லாத போது அந்த கிலாஃபத்தை நிலைபெறச் செய்வதே முஸ்லிம்கள் செய்ய வேண்டிய மிகவும் முக்கியம் வாய்ந்த மற்றும் மிகவும் உயரிய அரசியல் செயல்பாடாகும். இதை தவிர்த்து முஸ்லிம்கள் தற்போது நிலைபெற்றிருக்கும் அரசு வடிவங்களில் தங்கள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது அல்லது உம்மா எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகளை சரி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்வது என்பது மிகவும் உயரிய அரசியல் விவகாரமான கிலாஃபத்தை மறு நிர்மாணம் செய்வதற்கு இடையூறாக அமைந்துவிடும்.
பிரத்தியேக கண்ணோட்டம்
ஒரு முஸ்லிம் அரசியலில் ஈடுபடும் முன் அவருடைய பார்வை மற்றும் அவருடைய கண்ணோட்டத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிடில்  மற்றவர்கள் சூழ்ச்சி செய்து தங்களின் திட்டத்திற்கு இவரை உபயோகித்து கொள்வர். ஒருவருடைய மனதில் தெளிவான கோணமும், கண்ணோட்டமும் இல்லாவிடில் அவரை ஒரு பலவீனமான அரசியல் தன்மை உடையவராக ஆக்கிவிடும்; அது அவருடைய குறிக்கோளை விட்டுவிடும் நிலைக்கு இட்டுச் செல்லும்.
இஸ்லாத்தை மையமாக கொண்டுள்ள அரசியல் கண்ணோட்டமானது  மற்றவைகளை விட மாறுபட்ட  தனித்தன்மை வாய்ந்ததாகும்.ஆகவே இதை ஒரு பிரத்யேக கண்ணோட்டமாக விவரிக்கலாம். இந்த பிரத்யேக கண்ணோட்டமானது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு திசை காட்டியாக சரியான அரசியல் செயல்பாடுகளை அமைக்க உதவுவதோடு அவரை சரியான திசை நோக்கி  கொண்டு செல்லும்.
இந்த பிரத்யேக கண்ணோட்டமானது அவர்களின் இச்சைகளின் படியோ அல்லது அவர்களின் ஆசைகளின் படியோ இருக்கக் கூடாது.மாறாக இது அவர்களின் ஆகீதாவிலிருந்து வரவேண்டும். இஸ்லாமிய மூல ஆதாரங்கள் மூலமாக நிறுவப்பட்ட விஷயம் என்னவெனில், இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறியாக வந்ததாகும். மேலும் அதனுடைய கண்ணோட்டமானது லாஇலாஹா இல்லல்லாஹ் என்பதை நோக்கியே அனைத்து செயல்பாடுகளும் அமைந்திருக்க வேண்டும் என்பதாகும். அதாவது ஷரீஆ சட்டங்கள் மற்றும் இஸ்லாமிய சித்தாந்தத்தை பற்றிய புரிந்துணர்வே ஒரு முஸ்லிம் அரசியல்வாதிக்கு நடப்புகளை காணும் கண்ணாடியாக இருக்க வேண்டும்.
சம்பவங்கள், நிகழ்வுகள் மற்றும் வாழ்வியல் பிரச்சினைகள் குறித்த ஒரு முஸ்லிமின் பிரத்தியேக கண்ணோட்டத்தை இஸ்லாம் மற்றும் அதன் சட்டங்களின் அடிப்படையில் உருவாக்குவது அவசியமாகும்.அக்கண்ணோட்டம் முதலாளித்துவ்வாதிகளைப் போல ஆதாயம் மற்றும் உபயோகம் போன்ற காரணங்களை கொண்டு உருவாக்கியதை போன்று இருக்கக்கூடாது. இது அந்த தனி மனிதன், அமைப்பு மற்றும் நாட்டின் அரசியலை மாசுபடுத்தி விடும். வேறுபட்ட அரசியல்வாதிகளின்  எதற்கு, எங்கு மற்றும் அவர்களின செயற்குறிப்புகளை புரிந்துகொள்வது மட்டும் ஒருவர் சிறப்பாக அரசியல் புரிய போதாது
இஸ்லாமிய அரசியல் கண்ணோட்டத்தை அமைத்தல்
சாதாரண சூழ்நிலைகளில் முஸ்லிம்கள் பிரத்தியேக கண்ணோட்டத்தை அமைப்பதென்பது ஒரு சாதாரணமான விஷயமாக இருக்கும். இஸ்லாம் நாட்டிலும் சமூகத்திலும் நடைமுறைப்படுத்தும் போது சமூகத்தில் இஸ்லாமிய சித்தாந்தம் சிறந்த முறையில் நிலைநாட்டப்பட்டிருக்கும். அதுவே தனி மனித வாழ்விலும் பிரதிபலிக்கும். முஸ்லிம் சமூகம் இன்று எதிர்கொள்ளும் இழிகேடான சூழ்நிலை என்னவென்றால், சமூகங்கள் இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டு அமைக்காமல் அவைகள் கலப்படமான உணர்வுகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல்வாதிகள்  ஒரு குழப்பமான கண்ணோட்டத்தை கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
அரசியல் என்பது மக்களின் விவகாரங்களை பார்த்து கொள்வது என எப்போதும் விவரிக்கப்படுகிறது. அதன் அர்த்தமானது அரசியல்வாதிகள் எவ்வாறு பிரச்சினைகளை அணுகுவது, மக்களுடைய தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பதாகும். இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் உம்மா பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.முஸ்லிம் உலகில் ராணுவ, அரசியல் மற்றும் கலாச்சார ஆக்கிரமிப்பு, பசி, பட்டினி, பற்றாக்குறையான கல்வி வாய்ப்புகள் மற்றும் மருத்துவத்திற்காக செலவு செய்ய முடிந்தவர்களுக்கு கூட சேவை அளிக்க செயலற்று கிடக்கும் சுகாதார அமைப்பு போன்றவையே உலகெங்கிலும்  பெருவாரியான முஸ்லிம்களுடைய நிலையாக இருக்கின்றது. இதை கருத்தில் கொண்டால் – தனி மனிதர்கள் இப்பிரச்சினைகளை சரி செய்ய முனைவது இயற்கையானதாகும்.
மக்களின் இச்சூழ்நிலைகளை மேம்படுத்துவதற்காக உள்ளார்ந்த நோக்கில் தங்கள் சேவையை தொடங்கிய பலர் அதிகப்படியான நேரங்களில் ஊழலுக்கு ஆட்பட்டு இன்றைய முஸ்லிம் உலகின் ஆட்சியாளர்களுக்கு கருவிகளாக மாறிவிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. முஸ்லிம் உலகின் சில பகுதிகளில் மக்களுக்கு ஏதாவது  செய்ய முயல்வது தடைசெய்யப்பட்டதாக கருதப்படுகிறது,  இவ்வகையான செயல், பேச்சு அல்லது சிந்தனை தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுவதால் பெரும்பாலான சமயங்களில் சிறையில் அடைத்தல் மற்றும் சித்திரவதைக்கு உள்ளாக்குதல் போன்ற தண்டனைகளை பெற்றுத்தரக்கூடியதாக அமைந்து விடுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் பல அரசியல் இயக்கங்கள் வந்தும் சென்றும் இருக்கின்றன; அல்லது அதை நிர்மாணித்தவர்களின் நோக்கத்திலிருந்து வெகுவாக மாறுபட்டு வேறொன்றாக பரிணாமம் அடைய செய்திருக்கிறது.
முஸ்லிம்கள் மக்களின் நிலையை அல்லது தேவைகளை பூர்த்தி செய்ய தொடங்கும் முன் அவர்கள் ஈடுபடவிருக்கும் காரியத்தை பற்றிய அவர்களுக்கான ஒரு தெளிவான கண்ணோட்டத்தை அமைத்திருப்பது அவசியமாகும்.
இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் மட்டுமே இஸ்லாமிய அரசியல் கண்ணோட்டத்தை அமைப்பது கட்டாயமாகும்.
ஒரு முஸ்லிம் தன் வாழ்வை இஸ்லாமிய கொள்கையை அடிப்படையாகக் கொண்டு அமைத்துக்கொள்கிறார் – இதுவே அவர் ஈடுபடும் அரசியலுக்கும் அடிப்படையாக அமையும்.ஆகவே அவருடைய அரசியல் கண்ணோட்டமானது இஸ்லாத்தின் அடிப்படையில் மட்டுமே அமைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். மேலும் இஸ்லாமிய கொள்கைகள் பற்றிய சரியான புரிந்துணர்வு கொண்டிருப்பதும் அவசியமாகும். அவர் இப்போதுள்ள யதார்த்த நிலைகள் மற்றும் நிகழ்வுகளை இதன் அடிப்படையிலேயே காணவேண்டும்.
எடுத்துக்காட்டாக சில முஸ்லிம்கள் தற்போதுள்ள அரசில் பங்கு கொள்வதன் மூலம் மட்டுமே இஸ்லாத்தை நிலைநாட்ட முடியும் என கோருவது, மற்றும் இதன் மூலம் இன்றைய யதார்த்த நிலையில் இஸ்லாத்தின் சில பகுதிகளை நிலைநாட்டுதலில் வெற்றி பெற்றிருப்பதாக பறைசாற்றுவதன் மூலம் அவர் இஸ்லாமிய அகீதாவில் அடிப்படையாக கொண்டுள்ள புரிந்துணர்வை நிராகரித்து விடுகிறார். ஏனென்றால் இஸலாத்தை பகுதியாகவோ படிப்படியாகவோ நிலைநாட்டுவதென்பது கூடாத ஒன்றாகும்.மேலும் குஃப்ரிய அமைப்புடன் இஸ்லாமிய அமைப்பு ஒருங்கிணைந்திருப்பது கூடாது. இதுவே இஸ்லாமிய கொள்கையை புரிந்து கொள்வதற்கான ஒரு அடிப்படையாகும்.இதுவே குறப்பிட்ட விஷயத்தில் இஸ்லாமிய அரசியல்வாதிக்கு சரியான கோணத்தை அமைக்க வழிவகுக்கும்.
وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَنْ يَفْتِنُوكَ عَنْ بَعْضِ مَا أَنْزَلَ اللَّهُ إِلَيْكَ
இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக;   (அல் மாயிதா: 49)
இதைப்போன்று ஒருவேளை மற்றவர்கள் ஜனநாயகம் முஸ்லிம்களுக்கு  நன்மையை கொண்டு செல்வதற்கான வழி என்று கோருவார்களேயானால் – ஜனநாயகம் குஃப்ரிய தன்மையுடையதாலும் மேலும் அது இஸ்லாமிய கொள்கைக்கு மாற்றமாக இருப்பதாலும் அவர் அந்த அழைப்பை நிராகரித்து விடவேண்டும்.
إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ
அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை.
(யூசுஃப் : 40)
சிலர் கிலாஃபா என்பது யதார்த்த நிலையிலிருந்து வெகுதொலைவில் உள்ளது எனவும் அதை சீக்கிரத்தில் நிறுவுவது இயலாது எனவும்,அதேவேளையில் நாம் நம் பகுதியில் உள்ள தனி நபர்களுக்கு உதவி புரிவது போன்ற உடனடி நோக்கத்திற்காக பாடுபட வேண்டும் எனவும் கோருகின்றனர். ஒருவேளை அவருடைய கண்ணோட்டம் இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் உருவாகியிருந்தால் அந்த நபர் சமூகத்தில் உள்ள தனிநபர்களுக்கு உதவும் செயல் ஸதக்காவை சார்ந்ததாகும். அந்த அமலுக்கு அல்லாஹ் سبحانه وتعالى கூலி வழங்குவான் என்பதை புரிந்து கொண்டிருப்பார். மாறாக அவருடைய கண்ணோட்டம் சரியான வகையில் அமைந்திருக்குமேயானால், கிலாஃபத்தை மறு நிர்மாணிப்பதற்கான செயலே மிகவும் முன்னுரிமை பெற்றுள்ளதாக அவருக்கு உணர்த்தும். அவர் கிலாஃபத்தை நிர்மாணிப்பதை வெகுதொலைவில் உள்ளதா இல்லையா என்பதை பற்றி பரிசீலனை செய்யமாட்டார்.  இதன் அடிப்படையில் சரியான அரசியல் கண்ணோட்டத்தை அமைக்க இஸ்லாமிய கொள்கையை பற்றிய சரியான புரிதல் இருப்பது இன்றியமையாததாக இருக்கிறது.
فَسَيُنْغِضُونَ إِلَيْكَ رُءُوسَهُمْ وَيَقُولُونَ مَتَىٰ هُوَ ۖ قُلْ عَسَىٰ أَنْ يَكُونَ قَرِيبًا
அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். “அது வெகு சீக்கிரத்தில் ஏற்படலாம்” என்று கூறுவீராக             (அல் இஸ்ரா,:51)
அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த விழையும் நபர்களிடம் இஸ்லாமிய கொள்கை பற்றிய அடிப்படையான புரிதல் அவர்களின் மனதில் பலவீனமாக இருந்தால், அவர்கள் அரசியல் அமைப்பிலிருந்து திசைமாறவும் சிலசமயங்களில் முற்றிலும் அரசியலை விட்டுச்செல்வதும் எளிதாக இருக்கும். ஆகையால் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவர்கள் இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் தங்களை பக்குவப்படுத்தி கொள்ள விடாமுயற்சி செய்யவேண்டும். அவ்வாறு இல்லாதபோது முதல் தடங்களிலேயே அவர்கள் தடுமாற நேரிடும். ஒரு முஸ்லிமின் அரசியல் கண்ணோட்டம் எப்போதும் இஸ்லாமிய கொள்கையில் நங்கூரமிடப்பட்டிருக்க வேண்டும். இதிலிருந்து அவர் எக்காலத்திலும் திசை மாறுவது கூடாது. முஸ்லிமானவர் முதலில் தனக்கான ஒரு பார்வையை உருவாக்கவேண்டும் அதாவது அவருடைய கருத்தாக்கம் எதைக்கொண்டு பார்ப்பதென்பதும், பின்னர் அவரை சுற்றி ஏற்படும் உலக நிகழ்வுகள், செயல்கள் பற்றிய புரிந்துணர்வை உருவாக்குவதுமாகும். அதன் பின்னர் அவருடைய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – அது இன்று உம்மத்தை மறுமலர்ச்சி அடைய செய்வதிலும் மற்றும் கிலாஃபத்தை மறுநிர்மாணம் செய்வதை மையமாகக் கொண்டும் இருப்பது கட்டாயக் கடமையாகும்.

No comments:

Post a Comment