Mar 22, 2011

G20 மாநாடுகளும் பின்னணிகளும்

உலகப்பொருளாதார நிலையை பற்றிகலந்துரையாடுவதற்காக G20 நாடுகளின் மாநாடு நவம்பர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெற்றன. மாநாட்டpல் இடம்பெற்ற விடயங்களை விவரிக்க முன்பு G20 தொடர்பான அடpப்படை விடையங்களை அறிந்து கொல்வது முக்கியமாகும்.

1994 – 95 காலப்பகுதியில் மெக்சிகோவிலும், 1997 இல் ஆசியாவிலும், 1998 இல் ரஷ்யாவிலும், 1999 இல் ஆஜன்டனாவிலும் உலக நிதி முறைமை நிதிநெருக்கடpயை ஏற்படுத்தியது. இதன் பின்பு 1999 செப்டெம்பர் 26 இல் இடம்பெற்ற G7 நாடுகளின் நிதி அமைச்சர்களின் கூட்டத்தில் G20 அமைப்பை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டது. ( முன்னர் இது 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் குழு என அழைக்கப்பட்டது.) இவ் அமைப்பின் முதற் கூட்டம் 1999 டpசம்பர் 15 – 16 ஆம் திகதிகளில்பெர்லின் நகரில் இடம்பெற்றது.இருபது நாடுகலைச் சேர்ந்த மத்திய வங்கி ஆளுநர்கள் மற்றும் நிதி அமைச்சர்களைக்கொன்ட குழுவே பு20 என அழைக்கப்படுகிறது. உலகப்பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கும் 19 நாடுகளுடன ஜரோப்பிய ஒன்றியமும் இதில் அங்கம வகிக்கிறது.

G20 இல் அங்கம் வகக்கும் பொரூளாதாரங்கள் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Global Gross National Product) 85% பங்கை வகிக்கின்றன. மேலும் உலக வர்தகத்தில் 80மூ பங்கை!ம் இவ்வமைப்பின் பொருளாதாரங்கள் கொன்டpருக்கின்றன ( ஜரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையிலான வர்தகமும் இதில் அடங்கும்.) இந்த அமைப்பில அங்கம்வகிக்கும் நாடுகளின் சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்காகும். ஆஜன்டpனா, அவுஸ்ரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தொனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் கொரியா, தென்ஆபிரிகா, துருக்கி, ஜக்கிய இராஜியம், அமேரிகா மற்றும ;ஜரோப்பிய ஒன்றியம் ஆகியவையே பு20 குழுவில் அடங்குகின்றன. இதற்கு மேலதிகமாக இந்நாடுகளின் நிதி அமைச்சர்கள், உலக வங்கித்தலைவர்கள் உட்பட சர்வதேச நானய நிதியம் (ஐஆகு), உலக வர்தக அமைப்பு (WTO) என்பனவும் G20 கூட்டங்களில் கலந்து கொள்வது வலக்கம்.உலக நிதி முறையைப் பாதுகாப்பது,சர்வதேச நிதிக்கட்டமைப்பை பாதுகாப்பதினூடாக மேற்கத்திய சக்திகளின பொருளாதாரத்தைப் பலப்படுத்துவது மற்றும் தேசிய கொள்கை வகுப்பு,சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் போன்ற விடயங்களில கலந்துறையாட வாய்ப்பளித்தல் போன்றவையே G20 இன் பிரதான இலக்காகும. சாவதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு (WTO) என்பவற்றினூடாக வளர்ந்து வரும் நாடுகளில் G20 தொழிற்பட்டு வருகிறது. இதன் நோக்கம் அந்நாடுகளை உலக நிதி முறைமையிள் நன்கு உள்வாங்கிக் கொள்வதாகும்.பிரான்ஸ் ஐனாதிபதி நிகொலஸ் சர்கோசி, பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுன் போன்றவர்கள் ஐரோப்பியத் தலைவர்களின் கட்டளையின் காரணமாக வாஷிங்டனில ;நடைபெற்ற கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கடன் நெருக்கடியை உலக அளவில் பரவ விட்டது தொடர்பில் ஐரோப்பியத் தலைவர்கள் அமெரிக்கா மேல் விசனம் கொண்டிருந்தனர். டொலரை உறுதிப்படுத்துவதற்காக மசகு எண்ணெய்,உணவு மற்றும் ஏனைய பொருட்களின் விலையை அமெரிக்கா திரிபு படுத்தியது. இதன் விளைவாக ஐரோப்பாவில் உற்பத்திச் செலவும் பணவீக்கமும் அதிகரித்தது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி வீதத்தைக் குறைப்பதைத் தவிர வேறெந்த வழியும் ஐரோப்பிய மத்திய வங்கிக்கு இருக்கவில்லை. இதன் விளைவாக ஐரோப்பிய பொருளாதாரம் சுரங்கத் தொடங்கியதுடன் முதலீட்டாலர்கள் !ரோவிலிருந்து டொலருக்கு மாறினர். ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பிடும் போது அமெரிக்காவில் நிலவிய குலறவான வட்டி வீதமும் பொருளாதார வளர்சசியும்முதலீட்டாளர்களை அமெரிக்காவின் பக்கம் கவர்ந்திழுக்கச் செய்தது. இதனால் !ரோவின் பெறுமதி வீழ்ச்சியடையத் தொடங்கியதுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. போதிய பொருளாதார வளர்ச்சி ஏற்படாத காரணத்தால் வட்டி வீதத்தைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஐரோப்பிய மத்திய வங்கிக்கு ஏற்பட்டது.இதனால் டொலருக்கெதிரான யுரோவின் பெறுமதி மேலும் குறைவடைந்தது. இதற்கு மத்தியில் இந்த நெருக்கடி தொடர்பில் கலந்துரையாட கூட்டமொன்றை ஒழுங்கு செய்யுமாறு சர்கோசி,பிரவுன்,மேர்கல் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஜோர்ஜ் புஷ்ஷைக் கேட்டுக்கொண்டனர். ஒக்டோபர் 5 ஆம் திகதி பு 8 அமைப்pல் அங்கம் வகிக்கும் நாடுகளான பிரித்தானியா,பிரான்ஸ்,ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியன கூடி,உலக நிதி முறையில் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்துவதற்கென சர்வதேச மாநாடொன்றை அவசரமாக ஒழுங்கு செய்வதெனத் தீர்மானித்ததாக அசோசியேடட் பிரஸ் (AP) தெரிவித்தது.

2008 ஒக்டோபர் 12 ஆம் திகதி நடைபெற்ற ஐரோப்பய ஒன்றிய கூட்டமொனறில் நிதி நெருக்கடியை சமாளி;ப்பதற்கான பிரேரணை ஒன்றை கோர்டன் பிரவுன் சமர்ப்பித்தார் பிரஸ்ஸல்ஸில் 2008 ஒக்டோபர் 15-16 ஆம் திகதிகளில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் பத்திகையாளர் மாநாட்டின் இரண்டாவது தினத்தில் கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய கமிஷனனின் தலைவர் மனவுல் பிரசோ (Manual Barosso) பின்வருமாறு தெரிவித்தார்

ஐரோப்பாதலைமை வகித்தால் மட்டுமே உலகளாவிய hPதியிலான ஓர் ஓப்பந்தம் ஏற்படும்.

பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசியும் ஐரோப்பிய கமிஷன் தலைவர் மனவுல் பிரசோ வும் ஜோர்ஜ் புஷ்ஷை 2008 ஒக்டோபர் 18 அன்று கேம்ப் டேவிட் இல் சந்தித்தனர்.

தற்போதுள்ள நெருக்கடி உலகளாவிய நெருக்கடி, எனவே இதற்கென உலகளாவிய தீர்வொன்றை எட்ட வேண்டும் என்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 அங்கத்தவர்களினதும் நோக்கமாகும்__ என அங்கு சர்கோஸி தெரிவித்தார்.

உலக நிதி முறைமையின் அடிப்படைகன்,விதிமுறைகள்,அதன் நிறுவனங்கள் என்பன மறுசீரமைக்கப்பட வேண்டும். உலகளாவிய hPதியில் புதிய நிதி முறைமை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அதனாலேயே சர்வதேச அளவிலான மாநாடொன்றை ஐரோப்பா நடாத்த விரும்புகிறது என பிரசோ தெரிவித்தார்.

உலக முதலாலித்துவத்தை மறுசீரமைப்பதற்கான முன்னெடுப்பை ஐரோப்பாவே மேற்கொள்ள வேண்டும் என 21 ஒக்டோபர்2008 அன்று சர்கோசி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது தேவைப்படும் மாற்றத்தை ஏற்படுத்தத் தேவையான தலைமைத்துவத்தை ஐரோப்பிய ஒன்றியமே ஏற்க வேண்டும் ஏனெனில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியமே தொடர்ந்து கூறி வருவதுடன் அமெரிக்கா இதற்கு சாதகமாக இல்லை என ஸ்பானிய பிரதமர் ஜேஸ் லுயீஸ் ரொட்ரிகஸ் செபடரோ தெரிவித்துள்ளார்.

மாணியம்,ஊக்குவிப்பு தொடர்பான எல்லா விடயங்களிலும் கட்டுபபாடுகள் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிதித்துறையைக் கட்டுப்படுத்த குறிப்பாக அமெரிக்காவில் போதிய முறைமை இல்லாமையே உலக நிதி நெருக்கடிக்குக் காரணமாகும். என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதானிகள் நம்புகின்றனர். இதை வேறு வழியில் கூறுவதெனில் அமெரிக்க முதலாலித்துவமே உலக நிதி நெருக்கடிக்கு காரணம் என அவர்கள் நம்புகின்றனர். உலகப் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப ஒருங்கிணைக்கப்பட்ட செயற்திட்டம் வேண்டுமெனவும், வட்டி வீதத்தைக் குறைப்பதன் மூலமும ;அரசசெலவை அதிகரிப்பதன் மூலமுமே இதை எட்ட முடியும் எனவும் அவர்கள் எதிர்;பார்க்கின்றனர். எதிர்கால சீர்திருத்தங்களை ஏற்படுத்தத் தேவையான திட்ட வரைவொன்றை இந்த கூட்டத்தில் ஏற்படுத்த முடியும் எனவும், சர்வதேச நாணய நிதியம் (IMF) ,உலக வங்கி போன்றவற்றிட்குத் தேவையான மாற்றங்களையும் அத்திட்ட வரைவு உள்ளடக்கும் எனவும் அவர்கள் நம்புகின்றனர். இதன் பின்னணியிலேயே நவம்பர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் சர்வதேச மாநாடொன்று வாஷிங்டனில் கூட்ட புஷ் சம்மதித்தார் ஒரு சில மேலோட்டமான இலக்குகளையும், கொள்கைகளையும் வகுப்பதைத் தவிர தனித்துவமான தீர்வுகள் எதையும் G20 மாநாடு எட்டப்போவதில்லை எனத் தெரிகிரது.

மாநாட்டின் பின் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட சில விடயங்கள் பின்வருமாறு இலக்குகள்

1. உலக நிதி நெருக்கடி ஏட்பட்டதற்கான அடிப்படைக் காரணிகள் தொடர்பில் புரிந்துனர்வு ஏற்பட்டது.


2. நெருக்கடியை சமாளிப்பதற்கு நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கைகளும் குறுங்காலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைகளும் ஆராயப்பட்டன.

3. நிதிச்சந்தைகளை சீரமைப்பதற்கான பொதுவான கொள்கைகளில் இணக்கம் காணப்பட்டது.

4. அக்கொள்கைகளை நடைமுறைப்படுத்த செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டன. மேலதிகமாக பிரேரணைகளை சமர்ப்பிக்க அமைச்சர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதுடன் தொடர்ந்து வரும் மாநாடுகளில அவற்றைத் தலைவர்கன் ஆராய்வர்கள் எனவும் இணங்கப்பட்டது.

5. திறந்த சந்தைக் கொள்கைகளுக்கான அவர்களது பஙகளிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.


கொள்கைகள் (PRINCIPLES)

1. நிதியியல் வெளியீடுகளின் (Financial Products)வெளிப்படுத்தல்களை (Disclosure) அதிகரிப்பதினூடாக வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தல்.

2. கடன் தரப்படுத்தல் நிறுவனங்களை (Credit Rate Agencies) மேற்பார்வை செய்வதினூடாக திறனான கட்டுப்பாடுகளை உருவாக்குதல்.

முன்னெச்சரிக்கை அபாய முகாமையை (Prudent Risk Management) ஏற்படுத்தல்.

3. சந்தையில் மோசடிகளைத் தவிர்ப்பதன் முலம் நிதிச்சந்தைகளில் நேர்மைத்தன்மையை அதிகரித்தல், முரண்பாடுகளை தீர்த்து வைக்க உதவுதல்.

4. நிதிச்சந்தையின் பல்வேறு பிரிவுகளுக்கும் கொள்கைகளை வகுப்பது தெரடர்பில் கொளகை வகுப்பாளர்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தல், உள்ளுர் சட்டதிட்டங்களை சர்வதேச நியமங்களுக்கேற்ப வகுப்பதினூடாக சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்தல்.

5. சர்வதேச நிதி நிறுவனங்களின் நிர்வாகத்தையும் அங்கத்துவத்தையும் மாற்றியமைத்து அவற்றை மறுசீரமைத்தல். நடைபெற்ற மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்கிடையில் போதிய இணக்கப்பாடு ஏற்படாமைக்கான காரணங்கள் பின்வருமாறு,

முதற்காரணி

உலக நிதி முறைமையில் முழுமையான சீர்த்திருத்தத்தைக் கொண்டுவர உள்ளுரிலோ சர்வதேச அரங்கிலோ ஜேர்ஜ் புஷ் போதிய அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. மேலும் புஷ்ஷின் பதவிக்காலம் முடிவடைய சில நாட்கலே இருப்பதால் ஒபாமா பதவி ஏற்கும் வரை தங்களது பிரேரணைகளை சமாப்;பிக்க உலக நாடுகளின் தலைவர்கள் காத்திருக்கின்றனர். திறந்த சந்தை முறைமையைப் பாதுகாக்கவும் அமெரிக்க முதலாலித்துவம் மீதான ஐரோப்பாவின் குற்றச்சட்டிலிருந்து கவனத்தை திசை திருப்பவுமே மாநாடு முழுவதும் புஷ் முயற்சி செய்து கொண்டிருந்தார்.

நிதித்துரையில் சீhத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் அதேசமயம், நிலைத்து நிற்கும் பொருளாதார் இப்பிரச்சினைக்கான நீண்ட காலத் தீர்வு__ என புஷ் தெரிவித்தார்

வளர்ச்சியை ஏறபடுத்துவதற்கான திறந்த சந்தையும் சுதந்திரமான மக்களுமே சிறந்த வழி__ என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் புஷ்ஷால் செய்ய முடிந்ததெல்லாம் திறந்த சந்தை தொடர்பில் (பார்க்க, இலக்கம் 5) ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்தியமையே. மிகுதி விடயங்களை அவர் அடுத்த ஜனாதபதி ஒபாமாவிற்கு விட்டு வைத்து விட்டார்.

இரண்டாவது காரணி

நிலையான நாணயமாற்று வீதத்தையும ;சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றையும் உருவாக்கிய பிரட்டன் (Bretton Woods) ஒப்பந்தத்தை மாற்றியமைப்பது தொடர்பில் சில ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கருத்துத்தெரிவித்திருந்தனர்.

உண்மையான அனைத்து சீர்திருத்தங்களையும் உள்ளடக்கிய சர்வதேச நிதி முறைமையில் ஏற்படுத்த பிரட்டன் கொண்டுவரப்பட வேண்டும்__ என என்கலா மெர்கலும் நிகலஸ் சர்கோஸியும் கூறியிருந்தார்.

புதிய பொருளாதார முறைமை ஒன்றை அமைப்பதற்கு உலகத் தலைவர்கள் முன்வர வேண்டும்__ என கோர்டன் பிரவுண் 2008 ஒக்டோபர் 13 அன்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து வரும் காலங்களுக்குத் தேவையான புதிய சர்வதேச நிதிக்கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த புதிய பிரட்டன் தேவைப்படுகிறது__ என மேலும் அவர் கூறினார்.

எனினும் பிரவுனின் அனுகுமுறையும்பிரட்டன் இன் அனுகுமுறையும்சற்று வித்தியாசமானவை. உலக மயமாக்கலைத் தொடர்ந்தும் திறந்த சந்தையை ஆதரிக்கவும் முக்கியத்துவம் கொடுத்து வரும் பிரிட்டனின் கொள்கையும் நிலையான நாணய மாற்றுக்குத் திரும்ப வேண்டுமென்ற கொள்கையும ஒன்றுக்கொண்று முரண்படுகின்றது. பிரவுனின் அனுகுமுறையுடன் இணங்க மறுக்கும் சர்கோஸி (Anglo Saxon) முறையிலான கட்டுப்பாடுகளற்ற சந்தைகள் தோல்வியடைந்துள்ளன என வாதிடுகிறார் இக்கருத்தை ஆதரிக்கும் இத்தாலிய பொருளாதாரத்துறை அமைச்சர் Giulio Tremonti

புதிய Bretton Woods ஏற்படுத்த 2009 ஆம் ஆண்டின் G7 தலைமைத்துவத்தை இ;தாலி பயன்படுத்தும்__ எனத் தெரிவித்தார். Bretton Woods தொடர்பில் அமெரிக்காவின் கருத்து ஐரோப்பாவின் கருத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட. சர்வதேச நாணய நிதியம் (IMF) , உலக வங்கி , உலக வர்த்தக ஸ்தாபனம் (WTO) ஆகியவற்றிலிருந்து தனது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க அமெரிக்கா விரும்பவில்லை. மிதக்கும் நாணய மாற்று வீதம் (Floating Exchange Rates) உலக சந்தைகளை விட Wall Street இற்கு சாதகமாக இருப்பதால் அம்முறைமையை ஒழித்து விடவும் அமெரிக்கா விரும்பவில்லை. திறந்த முறைமையைத் தொடரும் அதேவேளை சர்வதேச நிதி நிறுவனங்களின் கட்டுப்பாட்டை தன் கீழ் வைத்துக் கொள்ளவும் பரித்தரியா விரும்புகிறது. தண்டனைகளிலிருந்து தப்பித்துக் கொண்ட அமெரிக்காவின் பாரிய நிறுவனங்களை அமெரிக்கா கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பிரித்தானியா எதிர்;பார்க்கிறது. மேற் கூறிய இரண்டு காரணிகளாலும் இலக்குகள், கொள்கைகள் தவிர G20 ஆல் வேறு விடயங்கிற்கு தீர்வு காண முடியவில்லை. இதை பல்வேறு தலைவர்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். எதிர்வரும் காலங்களில் நடக்விருக்கும் மாநாடுகளும் G20 கூட்டங்ளும் உலக நிதி முறைமையில் என்ன மாற்றம் ஏற்படும் எனத் தீர்மானிக்கக் கூடும்.
நவம்பர் 17 ,2008.

No comments:

Post a Comment