Mar 2, 2011

முதலாளித்துவம்

முதலாளித்துவம் என்பது மேற்கத்திய நாடுகள் கடைபிடித்துவரும் ஒரு வாழ்க்கை வழிமுறையாகும். அவ்வழிமுறை தீனையும், துனியாவையும் வேவ்வேறாக பிரிக்கின்ற ஒரு வாழ்க்கைத்திட்டமாகும். இதன் அடிப்படையில் மனிதனே மனிதனின் வாழ்க்கை வழிமுறையினை அமைக்கின்றான். இது இஸ்லாத்திற்கு மாறான குஃப்ர் முறையாகும். இஸ்லாத்தில் மனிதனுக்கு வாழ்க்கைக்கான சட்டமியற்றும் உரிமை இல்லை. அல்லாஹ்(சுபு)வே அனைத்திற்கும் மூலமானவன். அவனே மனிதனின் இவ்வுலக வாழ்க்கைக்கான சட்டமனைத்தையும் இயற்றியவன். தனிமனிதன் சமூகம் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றிற்கான சட்டமனைத்தையும் இயற்றியவன் அவனே.

சுதந்திரம்! உரிமை!
முதலாளித்துவக்கொள்கையில் ஒரு குறிப்பிடப்படும்படியான அம்சம் மனிதஉரிமை மற்றும் அதனை பாதுகாத்தல் ஆகும். அவ்வுரிமைகளாவன, வழிபாட்டு உரிமை, பேச்சுரிமை, சொத்துரிமை மற்றும் தனிமனித உரிமைகளாகும். சொத்துரிமையானது இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவக் கொள்கையின் வழித்தோன்றலேயாகும். இதன் மூலம் தனியுடமைக்கம்பெனிகள் தோன்றி மக்களை காலனிகளாக்கி அவர்களின் வளங்களை அபகரிக்கத் துண்டுகின்றன.

மேற்கண்ட உரிமைகள் இஸ்லாத்திற்கு முற்றிலும் மாறுபட்டவையாகும். ஒரு முஸ்லிமிற்கு அல்லாஹ்வை தவிர வேறொரு கடவுளை வணங்க அனுமதியில்லை.

ஒருவர் இஸ்லாத்தை ஏற்று பின்னர் தனது தீனை மாற்றிக்கொண்டால் அவர் பின்னர் இஸ்லாத்திற்கு திரும்புமாறு அழைக்கப்படுவார். அவர் அதனை ஏற்காவிடில் அவருக்கு மரணதண்டனை வழங்கப்படும்.

நபிகள் நாயகம்(ஸல்) குறிப்பிடுகிறார்கள் :

“தீனினின்றும் மாறியவர் கொல்லப்படவேண்டியவர்"

இஸ்லாத்தின் கருத்துக்களைத்தவிர வேறு எந்தக்கருத்துக்களையு; ஏற்றுக்கொள்ள ஒரு முஸ்லிமிற்கு அனுமதியில்லை. சொத்துரிமை என்பதும் இஸ்லாத்தின் அடிப்படையில் அமைவதேயாகும். முதலாளித்துவக் கொள்கையான “முடிந்தால் எந்தவகையான சொத்துக்களையும் எப்படிவேண்டுமானாலும் அடையலாம்" என்பது இஸ்லாத்தில் இல்லை. இஸ்லாத்தில் தனி மனிதனுக்கு தடுக்கப்பட்டவையான சொத்துக்களை அடைய முடியாது. வட்டி கொடுத்தல் வாங்குதல் மூலம் சம்பாதிப்பது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபானம், விற்றல், பன்றி இறைச்சி மூலம் சம்பாதித்தல் போன்றவை தடுக்கப்பட்டுள்ளன. எனவே எவ்வௌ;வழிகளில் சொத்துக்களை சம்பாதிக்க முடியும் என்பதை இஸ்லாம் வரையறைசெய்துள்ளது.

தனிமனித சுதந்திரம் என்பது. இஸ்லாத்தில் இல்லை. எந்த மனிதனும் இஸ்லாமிய சட்டதிட்டங்கட்கு உட்பட்டே நடக்கவேண்டும். ‘ஃபர்த்’ ஆன விசயங்களை செய்யாவிடினும் தண்டனையே! ஹராமான விசயங்களை செய்தாலும் தண்டனையே! உதாரணமாக தொழுகையை நிறைவேற்றாத ஒரு முஸ்லிம் தண்டிக்கப்படவேண்டியவர். மது அருந்துபவர், விபச்சாரம் செய்தவர் தண்டிக்கப்படிவேண்டியவர். எனவே சுதந்திரம் என முதலாளித்துவக்கொள்கையில் வரையறுக்கப்பட்ட எவையும் சுதந்திரம் அல்ல. மேலும் அவை இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைகளாகும்.

மக்களாட்சி!

முதலாளித்துவக்கொள்கையின் ஒரு முக்கிய அம்சம் மக்களாட்சியாகும். மக்களுக்காக மக்களால் மக்களாகவே நடத்தும் ஆட்சியே மக்களாட்சியாகும். இவ்வாட்சிமுறையில் அனைத்து ஆட்சி அதிகாரமும் மக்கட்கேயாகும். எனவே மக்களே தமக்காக சட்டமியற்றுபவர் ஆவர். அவர்களே தாம் விரும்பிய சட்டத்தை நடைமுறைபடுத்தும் அதிகாரம் பெற்றவர்கள். தமக்கு விருப்பமில்லாத சட்டங்களை அமுல் செய்வதினின்றும் தடுத்து விடுவதற்கும் மக்களுக்கு அதிகாரமிருக்கிறது. இந்த சட்டங்கள் அனைத்தையும் அனைத்து மக்களும் நேரடியாக பங்குபற்றி இயற்ற இயலாததால் தமக்காக ஒரு பொது பிரதிநிதியை நியமிப்பார்கள். இதன்படி தமது சார்பாக அவரிடமே சட்டமியற்றும் அதிகாரத்தை அளிக்கின்றனர். ஆட்சிசெய்யும் அதிகாரமும் மக்கட்கே. எனவே தமக்காக ஒரு பொது ஆட்சியாளரை தேர்ந்தெடுக்கின்றனர். எனவே மேற்கத்திய முதலாளித்துவ ஆட்சியில் மக்களே அனைத்து அதிகாரமும் படைத்தவராவர்.

ஆனால் இஸ்லாத்தை தழுவியவருக்கு இது ஒரு குஃப்ர் முறையாகும். ஏனெனில் இது ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட, இஸ்லாமிய ஷாPஆ ஏற்றுக்கொள்ளாத ஒரு விசயமாகும். எனவே மக்களாட்சிமுறையில் ஆள்வது இறைநம்பிக்கையற்ற முறையில் ஆள்வதாகும். மக்களாட்சி முறைக்காக அழைப்பு விடுப்பது குஃப்ர் முறைக்காக அழைப்பு விடுப்பதாகும். இஸ்லாத்தில் இது முற்றிலும் தடுக்கப்பட்டதாகும். மக்களாட்சிமுறை இஸ்லாமிய சட்டதிட்டங்கட்கு அப்பாற்பட்டதாகும். ஏனெனில் ஒரு முஸ்லிம் நடைமுறைபடுத்தவேண்டிய சட்டம் அல்லாஹ்விடமிருந்தே வருவதாகும்.ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் அடிமை. ஆதலால் அல்லாஹ்(சுபு) அமைத்த பாதை வழி நடப்பதும், அவன் அனுமதிக்காதவற்றினின்று விலகியிருப்பதும் கடமையாகும். அனைத்து ஆட்சி அதிகாரமும் அல்லாஹ்(சுபு)விடமே இருப்பதால் முஸ்லிம் உம்மா தனது விருப்பப்படி நடக்க இயலாது. ஷாPஆவிடமே அனைத்து அதிகாரமும் இருப்பதால் அதன் வழி மட்டுமே செல்ல இயலும். சட்டமியற்றுபவன் அல்லாஹ் மட்டுமே. அதனால் முஸ்லிம் உம்மா தானாக சட்டமியற்ற இயலாது. முஸ்லிம் உம்மா அல்லாஹ்(சுபு) விலக்கியவற்றை (உதாரணம்:வட்டிப்பணம்) நடைமுறைப்படுத்த இசையுமானால் அச்சட்டத்திற்கு எவ்வித அங்கீகாரமும் இஸ்லாத்தில் இல்லை. அடிப்படையில் அது ஷாPஆவிற்கு எதிரானது. அதனை எதிர்த்து போராடுவது கடமையாகும். ஆனாலும் மக்களை ஆட்சி புரியவும், ஷாPஆவை நடைமுறைபடுத்தவும் அதிகாரம் படைத்த ஆட்சியாளரை தமக்காக தேர்ந்தெடுக்கும் உரிமை முஸ்லிம் உம்மாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆட்சியாளர் சத்தியப்பிரமாணம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனவே ஆட்சியாளர் என்பது அல்லாஹ்வின் சட்டமனைத்தையும் நடைமுறைபடுத்துபவரே! ஏனெனில் சட்டமனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே அருளப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களாட்சி முறை இஸ்லாமிய முறை அல்ல. மேலும் அது இஸ்லாத்திற்கு எதிரான ஒரு கோட்பாடாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment