Nov 9, 2018

ஈடிணையற்ற இறைவா!

(மூலம்: ஆயத்துல் குர்ஸி /அல் குர்ஆன்: 2:255)
அல்லாஹ்!
ஊனுருகி, உடல் குறுகி,
உயிரொடுங்கி, உளம் நடுங்கி,
வணங்கிட ஒருவன்...
அவனைத் தவிர யாருமில்லை !

உயிர்த்திருக்கும் அவன்
என்றும் நிலைத்திருப்பவன்;
உணர்வுகளில் நித்தம்
மிகைத்திருப்பவன்!

சிறு துயிலோ
மடியோ
மதியழிக்கும் மயக்கமோ;
சுணக்கமோ
சுயமிழக்கும் சோம்பலோ
அவனை அணுகா!

வானங்களில், பூமியினில்
வளி மண்டல நிரப்பிடத்தில்
விண்வெளியில், வெற்றிடத்தில்
சிந்தைக்கு எட்டாத
அண்ட சராசரத்தில்
உள்ளவை யாவும்
உரியன அவனுக்கே!

அவன் ...
ஆட்சி அதிகாரத்தில்
அகிலம் காக்கும் ஆளுமையில்
படைப்பதில், பரிபாலிப்பதில்
விதிப்பதில், கொடுப்பதில்
காப்பதில், கற்பிப்பதில்
அவன் அனுமதியின்றி
பரிந்துரை செய்வோர்
பாருலகில், வேறுலகில் யாருளரோ?

ஒவ்வோர் உயிரும்
உருவாகு முன்னரும்
உயிர் வாழ்ந்த பின்னரும்
இரண்டின்
இடைப்பட்ட
எல்லா அசைவிலும்
யாவையுமறிந்த
ஞானமிக்கவன்

கணித்தறிந்துவிட முடியாத
அவன் தன்
அளப்பரிய ஞானத்திலிருந்து
அணுவளவேனும் யாரும்
அவன் நாட்டமின்றி
அறிந்திடல் இயலாது!

எப்பரிமாணம் கொண்டும்
எடுத்தியம்பிட இயலாத
எல்லைகளுள் அடங்காத
இறையாசனம்
வானங்களுக்கும் பூமிக்குமாய்
வியாபித்திருப்பதாகும்!

வானங்களும் பூமியும்
அவ்விரண்டினையும்
இன்னும்
எவருக்கும் எட்டாத
ஏகாந்த இருப்புகளையும்
எடுத்தாள்வது
எம்மிறையாம் அவனுக்கு
யாதொரு பொருட்டுமில்லை
எந்தவொரு சிரமமுமில்லை

அவன் ...
கற்பனைகளுக்கோ
காட்சிகளுக்கோ எட்டா
உயர்ந்தவன்;
கணக்கீடுகளுக்குள்ளோ குறிப்பேடுகளுக்குள்ளோ அடங்காப்
புகழுக்குரிய அவன்...
மாண்பு மிக்கவன்!

-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

Feb 3, 2018

சிரியாவில் அமெரிக்காவின் திட்டத்தை நடைமுறைபடுத்துவதில் எர்டோகனின் எரிச்சல்

அமெரிக்கா சிரியாவில் அதன் திட்டத்தை செயல்படுத்த எர்டோகனை (துருக்கியை) கொண்டுவருவதில் வெற்றி கண்டுள்ளது. எர்டோகன், அமெரிக்கா சிரியாவில் குருதிஸ்களுக்கு ஆதரவாக உள்ளதால் அதன் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வெள்ளியன்று சிரியாவின் ஆப்ரின்(Afrin) பிராந்தியத்தில் துருக்கியின் பீரங்கிகள் மற்றும் இராணுவ தடவாளங்கள் தரைமட்டமாக்கபட்டன. துருக்கி உள்துறை அமைச்சர் அமெரிக்க ஆதரவு பெற்ற குர்திஷ் போராளிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை ஒன்றை அறிவித்தார். அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக ஏழு ஆண்டுகால யுத்தத்தால் சிதைக்கப்பட்ட ஒரு பிராந்தியத்தை இன்னும் நிலைகுலைய செய்ய அது அச்சுறுத்தியது.
சிரியாவில் அஸ்ஸாதின் தலைமையால் முழு சிரியாவையும் தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. எனவே அமெரிக்கா மீண்டும் ஒரு திட்டத்தை தீட்டுகிறது. சிரியாவின் வடமேற்கு பகுதியில் அஸ்ஸாதிற்கு எதிராக போராடும் குழுக்களை கட்டுபடுத்துவதற்கு அமெரிக்காவிற்கு துருக்கியின் உதவி தேவைப்படுகிறது, ஏற்கனவே அலப்போவில் முஸ்லிம் போராளிகளை துருக்கி இராணுவம் அடக்கி ஒடுக்கி கொன்று குவித்ததால் இம்முறையும் அவ்வாறு செயல்பட அமெரிக்கா துருக்கியை உதவிக்கு அழைக்கிறது.
சிரியாவில் அஸ்ஸாதின் திறனற்ற செயலற்ற தன்மையால் ஈரானும் ரஷ்யாவும் அவர்களை(முஸ்லிம்களை) இடமாற்றம் செய்தது. குப்ரை தலைமையாக ஏற்றாலோ அல்லது குப்ர்க்கு ஆதரவாக செயல்படும்வரை முஸ்லிம்கள் ஒரு போதும் வெற்றி அடைய மாட்டார்கள். முஸ்லிம்கள் தங்கள் நாடுகளிலுள்ள காபிர்களுக்கு எதிராகவும் குப்ர்க்கு ஆதரவாக செயல்படும் அட்சியாளர்களை எதிராக உறுதியாக தீரத்துடன் போராட வேண்டும்.
இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை மட்டுமே உலக முஸ்லிம்களை ஒன்றுபடுத்தி முஸ்லிம்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து அவர்களை அமைதியாக வாழ வைக்கும். அத்தகைய அறிவார்ந்த தலைமைக்கு சத்திய பிரமாணம் செய்வதின் மூலம் மட்டுமே வெற்றி அடைய முடியும்.

அப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்

இழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து


பாலஸ்தீன மத்தியக் குழுவின் கூட்டம் 15/1/2018, திங்களன்று முடிவுற்றது, அதன் இறுதி தீர்மானமானது சர்வதேச சட்டம் மற்றும் அமைதிக்கான அரபு நாடுகளின் முயற்சியின் அடிப்படையில் 1967ல் வரையப்பட்ட எல்லைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தாமல் பாலஸ்தீன அரசு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அதன் தலைநகரம் கிழக்கு ஜெரூசலேமாக இருக்க வேண்டும் எனவும் சர்வதேச தலைமையில் அமைதிக்காக வேண்டி உண்மையாக நடத்தப்படும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்ள வேண்டும் என கோரியது. அது ஓஸ்லோ உடன்படிக்கையின் காலம் முடிந்துவிட்டது எனக் கருதி பி.எல்.ஓ மூலமாக இந்த யூத அரசாங்கத்தின் (சட்டவிரோத) அங்கீகாரத்தை ரத்து செய்யவும், பாதுகாப்பு ஒத்துழைப்பை ரத்து செய்யவும் மற்றும் இந்த ஆக்கிரமப்பாளருடனான பொருளாதார சார்பு நிலையை துண்டித்து விடவும் பரிந்துரை செய்தது.


பாலஸ்தீனத்திலுள்ள ஹிஸ்புத்தஹ்ரீரில் உள்ள நாங்கள் பாலஸ்தீன அரசின் தலைவர் என்ன பேசினாரோ அதனையும் பாலஸ்தீனத்தையும், அதன் மக்களையும் அதன் கண்ணியத்தையும் இழக்க வைத்த இந்த துரோகமிழைக்கும் அணுகுமுறையை பாலஸ்தீன அரசும் அதன் நிறுவனங்களும் தொடர்ந்து கடைபிடிக்கும் போக்கை வலியுறுத்தும் இந்த மசோதாவையும் கண்டிக்கிறோம். இந்த தீர்மானமானது பாலஸ்தீனர்களின் எதிர்காலத்தை உம்மத் மீதும் பாலஸ்தீன மக்களின் மீதும் பகைமையை கொண்டுள்ள பெரும் சக்திகளிடம் பிணையாக ஆக்கியுள்ளது. இந்த யூத அரசை (சட்டவிரோத) அங்கு நிர்மாணித்து, நிதியுதவி மற்றும் ஆயுதங்கள் வழங்கி மற்றும் அநீதமான சர்வதேச தீர்மானங்கள் நிறைவேற்றுவதன் மூலம் அதற்கு ஆதரவளித்து வந்தது இந்த சக்திகள் தான். அதேசமயம் பாலஸ்தீன அரசாங்கம் பாலஸ்தீனத்தின் விடுதலை குறித்தான கோரிக்கையை முழுமையாக கைவிட்டுவிட்டு உம்மத்தையும் அதன் ராணுவங்களையும் அவ்வாறே செய்யுமாறு கோருகிறது.


இவ்விஷயத்தில் கீழ்வருனவற்றை நாம் வலியுறுத்துகிறோம்:


ஜெரூசலேத்தின் விஷயத்தில் அமெரிக்கா தனது தீர்மானத்தை நிறைவேற்றி ஓங்கி அறைந்து மற்றும் இந்த நூற்றாண்டின் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்கு பின்னர் பாலஸ்தீன அரசாங்கத்தின் தீர்மானங்கள் அவர்கள் அமெரிக்க எதிர்ப்பு வாக்கு வன்மையிலிருந்து விலகிச் சென்றுள்ளதை தெளிவாகக் காட்டுகிறது. இந்த தீர்மானங்கள் ஐரோப்பிய நாடுகளின் மனநிலை மற்றும் விருப்பங்களுக்கு அடிபணிந்துள்ளதாக இருக்கின்றது, அது இந்த அரசு ஓஸ்லோவை புதைப்பதிலிருந்தும் யூத அரசாங்கத்தை (சட்டவிரோத) அங்கீகரிக்க மறுத்த நிலையிலிருந்தும் பின்வாங்கச் செய்தது, மற்றும் ஓஸ்லோ நிருவப்பட்ட இடைநிலை கால அவகாசம் முடிவுற்றதை மட்டுமே அறிவித்தது மற்றும் இந்நிறுவனத்திடம் அதன் அங்கீகாரத்தை நிறுத்திவைக்குமாறு பரிந்துரைத்தது. இந்த தீர்மானங்களானது இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் பாலஸ்தீன மக்கள் மீது விரோதத்தை கொண்டிருக்கும் நாடுகள் ஏற்படுத்திய அமைதிக்கான தீர்மானங்கள், பேச்சுவார்த்தைகள் மற்றும் மாநாடுகளை பின்பற்றியதாக இருந்தது. இந்த அமைதி நடவடிக்கை மற்றும் துரோகமிழைக்கும் ஒப்பந்தங்களானது பாலஸ்தீன மக்களுக்கு பேரழிவையும் குற்றங்களையும் இழைப்பதற்கு இட்டுச் சென்றுள்ளது அது மேற்கு ஜெரூசலேம் உட்பட பாலஸ்தீனத்தின் பெரும்பகுதியை முழுவதுமாக யூதர்களுக்கு உரியதாக ஆக்கியுள்ளது அதேவேளையில் மீதமுள்ளவை (நிலப்பரப்பு) குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மற்றும் அது பாலஸ்தீன அரசாங்கத்தையும் அதன் பாதுகாப்பு அமைப்புகளையும் யூத அரசுடைய (சட்டவிரோத) பாதுகாவலராக ஆக்கியுள்ளது; எவ்விதமான பாதுகாவலர் என்றால் இந்த ஆக்கிரமிப்பின் பாதுகாப்பு, நிதி, பொருளாதார மற்றும் அரசியல் பலுவை சுமந்ததாகவும் பாலஸ்தீன அரசாங்கத்தின் தலைவர்கள் இதை அங்கீகரித்ததன் மூலம் இந்த ஆக்கிரமிப்பை வரலாற்றின் மலிவான ஆக்கிரமிப்பாக ஆக்கியுள்ளது, தினசரி உயர்ந்து வரும் வரிகளுக்கு பாலஸ்தீன மக்கள் தங்களுடைய உதிரங்களை கொண்டும் தங்களுடைய குழந்தைகளின் வாழ்வாதாரத்தை விலையாகவும் கொடுத்து வருகின்றனர்….


இருநாடு உருவாக்கம் எனும் தீர்வை கடைபிடிப்பது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கும் அவர்களுடைய உதிரங்களுக்கும் தியாகங்களுக்கும் இழைக்கும் துரோகமாகும். இத்தீர்வானது ஆக்கிரமிப்பாளருக்கு ஜெரூசலேத்தின் பெரும்பகுதி உட்பட 80% நிலப்பரப்பை வழங்கி பலப்படுத்துவதாகவும், பாலஸ்தீன அரசாங்கத்துக்கு “கிழக்கு ஜெரூசலேம்” என்று அவர்களால் அழைக்கப்படுவது உட்பட சிரிய அளவிலான 20% நிலப்பரப்பை வழங்குவதாக இருக்கின்றது”; சந்தேகமில்லாமல் அவர்கள் தீர்மானித்திருப்பது தீங்கை விளைவிக்கக்கூடியதை தான்! பாலஸ்தீன அரசாங்கமும், மத்தியக் குழுவும், பாலஸ்தீன விடுதலை இயக்கமும் அதன் பிரிவுகளும் விடுதலை அடைவது (பாலஸ்தீனத்தின்) எனும் கருத்தை முழுமையாக கைவிட்டுள்ளன மற்றும் அதன் அகராதி மற்றும் சொல்லகராதியிலிருந்து நீக்கியுள்ளன. அது விடுதலை அடைவதற்கான ஒரே வழியை அதாவது உம்மத்துடைய இராணுவங்களை அணிதிரட்டி அதன் அனைத்து சக்தி மற்றும் திறன்களை இந்த யூத அரசை வேரோடு அழிப்பதற்காக வேண்டி தீர்க்கமான போர் ஒன்றை புரிவதை நோக்கி இயக்க வேண்டும் என்பதை அகற்றியுள்ளது. மாறாக அது குற்றம் புரிந்த நாடுகளின் நரிகள் அதற்கு சர்வதேச அளவிலான பாதுகாப்பைத் தரவேண்டும் என கோரிக்கையை கொண்டுள்ளது; ஆக, பாலஸ்தீனம் மீதான யூத ஆக்கிரமிப்புக்கு கூடுதலாக சர்வதேச ஆக்கிரமிப்பு ஒன்றையும் சேர்த்துள்ளது. சந்தேகமே இல்லாமல் அவர்கள் தீங்கை தான் தீர்மானித்திருக்கிறார்கள்! இஸ்லாமிய உமமத்தின் உதிரமானது அதன் நரம்புகளில் கொதித்துக் கொண்டிருக்கிறது என்பதை பாலஸ்தீன அரசாங்கம், அமெரக்கா, ஐரோப்பா மற்றும் யூத அரசாங்கம் (சட்டவிரோத) ஆகியோருக்கு நாங்கள் வலியுறுத்திக் கூறுகிறோம்.


நீங்கள் சார்ந்திருக்கும் ஆட்சியாளர்களையும் அவர்களுடைய கீழ்படுதலையும் மற்றும் உங்கள் மீதான அவர்களது விசுவாசத்தையும் துடைத்தெரியும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த உம்மத் அல்லாஹ்வின் ஆணையைக் கொண்டு வெகுவிரைவில் இவர்களை தூக்கியெறிந்து நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான கிலாஃபா ராஷிதாவை நிறுவும்; அது இவர்களை வேரோடு தூக்கி எறிந்து ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனம் மற்றும் அனைத்து முஸ்லிம் தேசம் என முழுவதையும் விடுவித்து மற்றும் அமெரிக்காவையும் மேற்கத்திய நாடுகளையும் அவர்களுடைய உறைவிடத்திற்கு துரத்திவிடும் மற்றும் துரோகமிழைத்த அனைவருக்கும் தண்டனை வழங்கும்.


அந்நாளை எதிர்பார்த்துக் கொண்டிருப்போருக்கு அந்நாள் வெகு அருகில் உள்ளது.


“நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தைச் செய்தே முடிப்பான். ஆயினும், அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் (ஒரு காலத்தையும்) அளவையும் ஏற்படுத்திவிட்டான். (அதன்படியே நடைபெறும்.) (அல்குர்ஆன் : 65:3)

Jan 30, 2018

பதிவுகள் தொடரும்...!!

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே...!!!


முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்டுரைகள், ஆய்வுகள், கண்ணோட்டம் என்று அனைத்து பதிவுகளும் ஒரே தளத்தில்
விரைவில் தொடர இருக்கிறது. தொடர்ந்து வந்து வசித்து செல்லும் அன்பு சகோதர்களே உங்கள் ஆதர்வுகளே தந்து இங்கு நீங்கள் படிக்கும் செய்திகளை மற்றவர்க்கும் பகிருங்கள்.

இன்ஷா அல்லாஹ்
என்றும் அன்புடன்
அபு நுஸைபா

Sep 10, 2016

எனது ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்கினிய சகோதரர்களே!

நமது இஸ்லாமிய மறுமலர்ச்சி இணையதளம் 7 ஆண்டு பணியை நிறைவு செய்து, 8 ஆம் ஆண்டு இணையப் பணியில் கால் எடுத்து வைக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.


இன்ஷா அல்லாஹ்... விரைவில் islamicuprising.blogspot.com என்ற முகவரியில் செயல்படும் இந்த இணையதளம் www.islamicuprising.com என்று செயல்பட இருக்கிறது.

ஈதுல் அழ்ஹா தியாகப் பெருநாளை கொண்டாட இருக்கும் உறவுகளை ISLAMIC UPRISING BLOG வாழ்த்துகிறது: ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் இறைத் தூதர்களான இப்றாஹிம் (அலை), அவரது மனைவி ஹாஜரா (அலை), இவர்களது மகனான இஸ்மாயில் (அலை) ஆகியோரின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், உறுதியையும் முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்தும் நாளாகும். அதேவேளை ஹஜ் கடமையானது ஒரு சர்வதேச மாநாடாகவும் அமைந்திருக்கின்றது.

ஹஜ் என்ற சர்வதேச மாநாட்டில் உலகின் பல பகுதிகளில் இருந்தும் முஸ்லிம் உம்மாவின் உறுப்பினர்கள் மக்காவில் ஒன்றுகூடி ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றனர். இன , மொழி, நிற , பிரதேச , தேச வேறுபாடுகள் புறக்கணித்து ஒரே விதமாக ஒரேநேர காலத்தில் வெள்ளை நிற ஆடை அணிந்தபடி தம் கடமையை நிறைவேற்றுகின்றார்கள். இவைகள் முஸ்லிம் உம்மாவிற்கு ஒன்றுமையையும் ஒருமைப்பாட்டையும் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், உறுதியையும் கற்றுகொடுக்கின்றது. இவற்றை நினைவில் கொண்டு ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட உங்கள் அனைவரையும் Islamicuprising.blogspot.com
வாழ்த்துகின்றது.

Sep 7, 2016

10 லட்சத்திற்கும் மேலான பெல்லட் குண்டுகள் கஷ்மீர் மக்கள் மீ்து பிரியோகித்துள்ளது

கஷ்மீரில் 10 லட்சத்திற்கும் மேலான பெல்லட் குண்டுகளை மக்கள் மீ்து பிரியோகித்துள்ளதாக இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
 
உலகெங்கிலும் இல்லாத அளவிற்கு ஆறு லட்சம் ராணுவ படையை இரக்கி இந்திய அரசு கஷ்மீரை ஆக்கிரமித்து வைத்துள்ளது. அது மட்டுமின்றி கஷ்மீர் மக்களின் மீது ஆயுதங்கள் பிரயோகிப்பதும் எப்போதையும் வீட கடந்த மாதங்களில் அதிகரித்துள்ளது (பாகிஸ்தான் செய்தி நிறுவனம் – தி நியூஸ்)
 
கடந்த 32 நாட்களில் 13 லட்சம் பெல்லட் குண்டுகளை சாலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரயோகப்படுத்தியதாக இந்திய துணை ராணுவம் ஜம்மு-கஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முன் ஒப்புக் கொண்டுள்ளது.
 
மேலும் அந்த அறிக்கையில் 8000 கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் 2000 பிளாஸ்டிக் பெல்லட் குண்டுகளும் பிரயோகித்துள்ளதாக  குறிப்பிடபட்டுள்ளது.
 
சாமானிய முஸ்லிம்கள் உலகெங்கிலும் பல நாடுகளில் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் பலபயங்கர இன்னல்களையும், அச்சுருத்தல்களையும் சந்தித்து வரிகின்றனர் எனினும் முஸ்லீம் நாடுகளின் ராணுவம் தங்களது இருப்பிடங்களைவிட்டு  நகருவதில்லை..
 
 
 
செய்தி பார்வை 20.08.16

ஏமன் மீதான போர்

ஏமன் மீதான போரில், சவுதி அரேபியாவில் உள்ள தனது ராணுவ ஊழியர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா குறைப்பதாக அறிவித்துள்ளது.
 
ஒபாமாவின் யுக்தியை அமெரிக்கா தொடர்கிறது, தொலைவிலிருந்து போர்களை இயக்கும் அந்த யுக்தியின் அடிப்படையில் சவுதி அரேபியாவில் உள்ள தனது ராணுவ ஊழியர்களை அமெரிக்கா குறைத்துள்ளது. (செய்தி – ரியுடர்ஸ்)
 
கூட்டுப்படை போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புதல், உளவு செயதிகள் பரிமாற்றம் போன்றவற்றை சவுதி அரேபியாவோடு ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்காக அமெரிக்கா கடந்த ஆண்டு “ஜாயின்ட் கம்பைன்ட் பிளானிங் செல்” என்ற செயல்திட்டதை தொடங்கியது, இதில் தற்போது ஐந்திற்கும் குறைவானவர்களே பனியமர்த்தபட்டுள்ளார்கள் என்று அமெரிக்காவின் கடற்படையின் செயதிதொடர்பாளர் லெஃப்டினன்ட்  இயன் மேக் கன்னகெய் பஹ்ரைனில் ரியுடர்ஸ் செய்திகளுக்கு தெரிவித்தார்.
இந்த பணிக்காக சவூதி தலைநகர் ரியாத் உட்பட பல இடங்களில் ஆமாரத்தப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை 45 லிருந்து 5 ஆகா குறைக்கப்படுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
இவ்வாறு அமெரிக்க ராணுவத்தினர்களின்ண் எண்ணிக்கை குறைக்கப்பட்டும் ஏமனில் தொடுக்கப்படும் தாக்குதலின் தீவிரம் குறையவில்லை. இது தொடர்பாக குவைத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தீர்வின்றி முறிவுற்றதால் ஏமன் மீதான சவுதியின் தாக்குதல் தீவிரமடயக்கூடும்.
 
முஸ்லீம் நாடுகளில் அமெரிக்கா நேரடியாக் இறங்கி போர் புரியும் நம்பிக்கையை இழந்துவிட்டது, அதனால் மற்ற தோழமை நாடுகளின் உதவியின் மூலம் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயன்று வருகிறது. அமெரிக்காவின் இந்த நிலமையை எப்போது உலகம் கண்டறிந்து புரிந்துகொள்ளும்?
 
 
செய்தி பார்வை 20.08.16

சிரியாவில் குர்து மக்களுக்கு விமானம் மூலம் வான் பாதுகாப்பு

சிரியாவில் குர்து மக்களுக்கு விமானம் மூலம் வான் பாதுகாப்பை அமெரிக்கா வழங்குகிறது.
 
இஸ்லாம் மற்றும் முஸ்லிம் மகளுக்கு எதிராக சிரியாவில் நடந்துவரும் போரில் அமெரிக்கா தனது திட்டத்தை வகுத்து செயல்படுத்தி வருகிறது, ஏதாவது ஒரு வகையில் தனது அதிகார வரம்பை மீறி செயல்கள் போகும் பட்சத்தில் அமெரிக்கா தனது படையை உபயோகிக்க தயராகவுள்ளது. ( செய்தி – 19/8/2016  தி நியூயார்க் டைம்ஸ்)
 
குர்து போராளிகள் சிரியாவின் வடகிழக்கு பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர், இவர்கள் அமெரிக்காவுடன் இனைந்து ISIS ஐ எதிர்த்துவருகிறார்கள். சிரியாவின் பஷார் அல் அசாத் அரசின் விமானம் குர்து போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை தாக்கியதை கண்டித்து அமெரிக்கா உடனடியாக தனது விமானத்தை அந்த நிலப்பரப்பின் மேல் பரக்க செய்து குர்துகள் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக பென்டகன் செய்தி தெரிவித்துள்ளது. சிரியாவின் பஷார் அரசுக்கும், குர்து போராளிகளுக்கும் இடையே அவ்வப்போது சில சிறிய மோதல்கள் நடந்துள்ளதே தவிர இவ்விருவருக்கும் இடையே பெரிய அளவிலான போர் நடைபெறாத நிலையில் இந்த விமான தாக்குதலை சிரியா அரசு குர்துகள் மேல் தொடுத்துள்ளது.
 
அமெரிக்கா இது போன்ற உதவிகளை சிரியாவில் உள்ள மற்ற எந்த போராட்ட குழூக்களுக்கும் வழங்கவில்லை, இஸ்லாமிய போராட்ட குழூக்கள் அமெரிக்காவின் செயல் திட்டங்களை ஏற்கமருப்பதாலும் இஸ்லாத்தைமையமாக வைத்து செயல்படுவதாலும் அந்த போராட்ட குழுக்களுக்கு எதிராகவே அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
 
 
செய்தி பார்வை 20.08.16

சிரியாவின் அலெப்போவில் அடைந்த தோல்வி

 
சிரியாவின் அலெப்போவில் அடைந்த தோல்வியை அடுத்து  ரஷ்யா, முஸ்லிம்களுக்கு எதிரான போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது .
 
 ஆகஸ்ட் முதல் வாரத்தில் சிரியா மற்றும் ரஷ்ய ராணுவதாள் அலெப்போவில் ஏற்படுத்தப்பட்ட முற்றுகையை அங்குள்ள பல இஸ்லாமிய போராட்ட குழுக்கள் இனைந்து உடைத்தார்கள். இதில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து ரஷ்யா மதியதரைகடலில் நிறுதிவைத்துள்ள போர்க்கப்பல் மூலமாகவும், ஈரனிலுள்ள விமானதளத்தை பயன்படுத்தி  விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும் தனது தாக்குதலை சிரியாவிலுள்ள முஸ்லிம்கள் மீது தீவிரப்படுத்தியுள்ளது.
 
சிரியாவில் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்காக போராடும் முஸ்லிம்களை எதிர்த்து முதல் முறையாக ரஷ்யா போற்கப்பல் மூலம் ஏவுகணை தாக்குதலை தெடுத்துள்ளது.
 
இது போன்ற பலமுனை தாக்குதல் நடவடிக்கையை  மேற்கொள்வதன் மூலம் ரஷ்யா தனது ராணுவ திறனை நிரூபித்து சிரியாவில் தனது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்த முயல்கிறது. இதற்கு முன் சிரியாவில் லடாகியவில் உள்ள தனது ராணுவதளத்திலிருந்தும், காஸ்பியன் கடலில் நிறுத்தி வைத்துள்ள போர்க் கப்பல்கள் மூலமும் சிரியாவின் கொடுங்கோல் அரசுக்கு ஆதரவாக அங்குள்ள முஸ்லிம்கள் மீது போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது கூடுதலாக மத்திய தரைகடலில் நிறுதிவைத்துள்ள  போர்க்கப்பலில் இருந்து ஏவுகணைகள் மூலமும், ஈரானின் விமான தளங்கலில் இருந்து போர் விமானங்களை பயன்படுத்தி குண்டுமலைகலை பொழிந்தும் தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்காவின் முழு அனுமதியின் பெயரில் நடந்துவருகிறது, சிரியாவில் இஸ்லாத்திற்கு ஆதரவான போராட்டத்தை ஒடுக்க ஈரானின் ராணுவதளத்தை ரஷ்யா பயன்படுத்தும் அளவிற்கான ஒரு சுமூக போக்கையும் அமெரிக்கா அனுமதித்துள்ளது.
 
சிரியாவில் இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ரஷ்யா ஒருபுறம் அமெரிக்காவின் கொள்கைக்கு இணங்க செயல்படுவதால். கிரிமியா தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு வழிவிட்டுள்ளது
 
 உக்ரைனுடைய எல்லைகளுக்கு அருகில் பத்தாயிரம் வீரர்களை உள்ளடக்கிய ரஷ்யபடை நகர்த்தப்பட்டிருப்பதை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை, மேலும் பென்டகனோரஷ்யாவின் இந்த நகர்வை வழக்கமான பயிற்சி நடவடிக்கை தான், அதனால் உக்ரைனின் இறையாண்மைக்கும், எல்லைக்கும் பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளது.
 
 
செய்தி பார்வை 20.08.16

Sep 6, 2016

கிலாஃபத் ஜனநாயக அமைப்பையோ அல்லது சர்வாதிகார அமைப்பையோ கொண்டதாக இருக்குமா?

இஸ்லாமிய அரசு இவை இரண்டையும் கொண்டிருக்காது.  மேற்கத்திய காலனியாதிக்க சக்திகள் தேர்தல் முறைதான் ஜனநாயகம் என்று தொடர்பு படுத்திவிட்டார்கள், ஆனால் இந்த விஷயத்தின் உண்மை நிலை அதுவல்ல. கிலாஃபத்தில் கலீஃபா உட்பட பல்வேறு பதவிகளுக்கு நபர்களை தேர்ந்தெடுக்க தேர்தல்கள் நடைபெறும், ஆனால் இவர்களில் ஒருவருக்கு கூட ஜனநாயகத்தில் இருப்பது போன்று தனி நபராகவோ அல்லது ஓரு கூட்டாகவோ சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்காது. அஃதாவது இது மக்கள் தங்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முடியும் என்றும் அதே சமயம் அவர்களால் ஷரீ’ஆவிற்கு மாறுபட்டு ஆட்சியாளர்கள் எவ்வித விசாரணைக்கும் தண்டனைக்கும் ஆளாவதிலருந்து விடுவிப்பது போன்ற கறைபடிந்த சட்டங்களை அவர்களால் இயற்ற முடியாது என்பதை விளக்குகின்றது. 6
நடைமுறை உபயோகத்தில், சர்வாதிகார ஆட்சி அமைப்பு என்பது அதன் தலைமையை சட்டமோ, அரசியல் அமைப்போ அல்லது இதர உள்நாட்டிலுள்ள சமூக மற்றும் அரசியல் காரணங்களும் அதன் வரையறைக்கு  கட்டுப்படுத்தாத ஒரு ஏகாதிபத்திய தன்மையுடையதை குறிக்கின்றது. இது இஸ்லாமிய சட்டத்திற்கு மாற்றமானதாக இருக்கின்றது ஏனெனில் கலீஃபா தனது செயல்பாடுகளை சில வரையறைக்குள் அமைத்து கொள்ளும்படியும் அதில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அதை சரிகாணும் செயல்பாட்டை கொண்டிருக்கும் அது அவரின் அதிகாரத்தை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும். கலீஃபா சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க மாட்டார், அவரும் மற்ற எல்லா குடிமக்களை போன்று அதற்கு கட்டுப்பட்டவராகவே இருப்பார்.
 
http://sindhanai.org/

தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்கா குறை கூறியதால் பாகிஸ்தான் அதிர்ப்தி

தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்கா குற்றம் சாட்டியதால் பாகிஸ்தான் அதிர்ப்தியில் ஆழ்ந்துள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆணைக்கு இணங்க செயல்படக்கூடிய அரசை நிலைபெரச்செய்வது குறித்த பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்க பாராளுமன்றத்தில் எழுந்த குற்றச்சாட்டால் பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் உள்ள அதிகாரிகள் அதிர்ப்தி அடைந்துள்ளனர்.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் தனது அரசுக்கு எதிராக செயல்படுபவர்களை மற்றும் ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொல்வதாகவும், மற்ற தீவிரவாத அமைப்புகளான ஹக்கானி குழு உட்பட பல குழுக்களுக்கு அது அடைக்கலம் அளிப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. (செய்தி – வாய்ஸ் ஆப் அமெரிக்கா)
ஒபாமா அரசு, மாணிய அடிப்படையில் பாகிஸ்தானுக்கு விற்கவிருந்த F 16 போர் விமான ஒப்பந்தத்திற்கும் அமெரிக்க பாராளுமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
அண்மையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் “பாகிஸ்தான் நட்பு நாடா அல்லது எதிரி நாடா” என்ற தலைப்பில் நடந்த விவாதம் பாகிஸ்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை அதிருப்த்தியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பேசுகையில், அமெரிக்காவின் ஆணைக்கு இணங்க செயல்படக்கூடிய ஆப்கனிஸ்தான் அரசுக்கு எதிராக இயங்கிவரும் ஹாக்கணி, தாலிபான் போன்ற குழுக்களுக்கு பாகிஸ்தான் உதவுகிறது. ஆகையால் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்துவரும் பொருளாதாரம் மற்றும் இராணுவ உதவிகளை முற்றிலுமாக நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கைகளை பதிவுசெய்தனர்.
ஆப்கனிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதரான ஸல்மே கலில்ஜாத் அமெரிக்கா, வட கொரியாவை கையாளுவதை போல் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து அதன் மூலம் ஆப்கனிஸ்தானில் தனக்கு சாதகமான நாடவடிக்கைகளை சாதித்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
எனினும் பாகிஸ்தானின் மூத்த அதிகாரிகள் அமெரிக்க பாராளுமன்றத்தில் எழுந்த பாகிஸ்தானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சிறிய பிரிவினரால் எழுப்பப்பட்ட அடிப்படை அற்ற குற்றச்சாட்டுகள் என்று கூறிவிட்டனர். (செய்தி – பிஸ்னஸ் ரேகார்டர்)
செய்தி கண்ணோட்டம்:
அமெரிக்காவின் குற்றச்சாட்டால் பாகிஸ்தான் ஆச்சரியபடவோ, அதிருப்தி அடையவோ ஒன்றும் இல்லை. அமெரிக்காவை பொறுத்தவரை, ஆசியாவில் தனது முதன்மை ஏஜென்டாக இந்தியாவை நிலைநிறுத்த பாகிஸ்தானை பணயமாகவே பயன்படுத்துகிறது. மேலும் பாக்கிஸ்தான் முஸ்லிம்கள் நாடு என்பதால் அங்கு எப்போது வேண்டுமானாலும் இஸ்லாமிய அரசான கிலாபா நிறுவப்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் கருத்தில் கொண்டவாறே அமெரிக்கா செயல்படுகிறது.
http://sindhanai.org/

செய்தி பார்வை 29.07.16

முஸ்லீம் பெண்கள் மாட்டு இறைச்சி எடுத்து சென்றதால் தாக்கப்பட்டனர்

“மத்திய பிரதேச மாநிலத்தில் முஸ்லீம் பெண்கள் மாட்டு இறைச்சி எடுத்து சென்றதால் தாக்கப்பட்டனர்”
மாட்டு இறைச்சி வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தால் இரண்டு முஸ்லிம் பெண்கள் மத்திய பிரதேசத்தில் ஒரு ரெயில் நிலையத்தில் தாக்கப்பட்டனர். அப்பெண்களிடம் அதிக அளவிலான மாட்டு இறைச்சி இருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பெண்களை கைது செய்யும் தருணத்தில் ஒரு கும்பல் அவ்விரு பெண்களையும் “கோமாதா வாழ்க” என்ற குரலோடு காவல் துறை முன்னிலையில் தாக்கினார்கள் (NDTV செய்தி அறிக்கை).
மத்திய பிரதேசத்தில் உள்ள மண்ட்ஸுர் ரயில் நிலையத்தில் முஸ்லீம் பெண்கள் தாக்கப்பட்ட வீடியோ காட்சி உள்ளூர் தொலைக்காட்சியிலும், NDTV செய்தியிலும் ஒளிபரப்பானது . காவல் துறையினர் அந்த பெண்களிடம் பறிமுதல் செய்த இறைச்சியை சோதனை செய்ததில் அது பசு இறைச்சி அல்ல எருமை மாட்டின் இறைச்சி என்றும் தெரிய வந்தது . ( இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி)
ஆனாலும் அப்பெண்களிடம் தகுந்த உரிமம் இல்லாததால் அவர்கள் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வாழும் இந்து மக்கள் பசு மாட்டை புனிதமாக கருதுகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் பசுவை அறுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.
சென்ற மாதம் பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் பசுவை அறுத்ததாக கூறி 4 தலித் இனத்தை சேர்ந்தவர்களை ஆடைகளை அவிழ்த்து காரில் கட்டிவைத்து ஒரு இந்து கும்பல் கடுமையாக தாக்கியதால் தலித் மக்கள் போராட்டத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
செய்தி கண்ணோட்டம்:
இந்திய அரசியல் வாதிகள் இந்தியாவை மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கூறி பெருமை கொள்கின்றனர். ஆனால் உண்மையோ இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மூன்றாம் தர குடிமக்களாக தான் கருத படுகின்றனர். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்து வெறியர்களால் தாக்கப்படுவது மட்டுமின்றி, அரசாங்கத்தின் முறையற்ற நடவடிக்கையால் முஸ்லிம்கள் வரிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவில் 14.4% சதவிகிதத்திற்கும் மேல் முஸ்லிம்கள் இருகின்றனர், ஸச்சார் அறிக்கை படி 31% சதவிகித முஸ்லிம்கள் அதாவது மூன்று முஸ்லிம்களில் ஒருவர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதாக கூறுகின்றது..
http://sindhanai.org/

செய்தி பார்வை 29.07.16

முஸ்லீம்கள் அகதிகளாக புலம் பெயர் வதை ஐரோப்பிய யூனியன் அனுமதிக்கக் கூடாது

“ஐரோப்பாவிற்கு முஸ்லீம்கள் அகதிகளாக புலம் பெயர்வதை ஐரோப்பிய யூனியன் அனுமதிக்கக்கூடாது என்று டச்சு (நெதர்லாண்டு) வலதுசாரி தலைவர் கீர்ட் வில்டர்ஸ் குறிப்பிட்டுள்ளார்”.

சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்த அகதிகளின் ஒருவர் ISISயின் பெயரால்- அண்மையில் ஜெர்மனியிலுள்ள அன்ஸ்பாக் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலையொட்டி, நெதர்லாண்டின் சுதந்திர கட்சியின் தலைவரான கீர்ட் வில்டர்ஸ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில் கட்டுப்பாடுகளை விதிக்காமல் இருப்பது தீவிரவாதிகள் நுழைவதற்கு வழிவகுக்கக் கூடியதாக இருக்கிறது என்று கூறி நெதர்லாண்டின் பிரதமர் மார்க் ரூட் மற்றும் ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கள் ஆகியோர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

சென்ற மாதம் அமெரிக்க ஊடகத்தில் (Breitbart) வெளிவந்த கட்டுரை ஒன்றில் வில்டர்ஸ் கூறுகையில், முஸ்லிம்கள் இஸ்லாத்தை புறம் தள்ளுமாறும், மேற்குலகின் சுதந்திரப்போக்கை ஏற்று செயல்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அவர் அக்கட்டுரையில் குறிப்பிடுகையில் ‘இஸ்லாம் சர்வாதிகார போக்கை கொண்ட மார்க்கம், அதன் தாக்கத்தால் பாதிப்பிற்குள்ளானவர்கள் தான் முஸ்லிம்கள்.

மேலும் அக்கட்டுரையில் அவர் எழுதுகையில், முஸ்லிம் குடும்பத்தில் உள்ளவர்கள் ஓரின சேர்க்கையாளராக மாறுவதை பற்றி சிந்திக்க வேண்டும். முஸ்லிம் பெண், முஸ்லிம் அல்லாத ஆண்களை திருமணம் செய்ய முன் வருவதற்கு கற்பனை செய்ய வேண்டும். முஸ்லிம்கள், கிறிஸ்துவத்திற்கோ, வேறு மதத்திற்கோ அல்லது இறைமறுப்பாளராகவோ மாற முன் வர வேண்டும்.

இது போன்று முஸ்லிம்கள் சிந்திக்க தொடங்கினால் அது அவர்களுக்கு மட்டுமன்றி மேற்கத்திய கலாச்சாரத்தின் நலனிற்கும் உகந்ததாகும்.

முஸ்லிம்கள் தங்களது இஸ்லாமிய மார்க்கத்திற்கு புறமுதுகு காட்டி விட்டு, கிறிஸ்துவராகவோ, இறை மறுப்பாளராகவோ அல்லது வேறு கொள்கைகளை நோக்கி விரைய வலியுறுத்துகிறோம்.

முஸ்லிம்கள் தங்களை இஸ்லாம் மற்றும் முஹம்மதின் கடிவாளத்திலிருந்து விடுவித்து கொள்வதே அவர்களுக்கு சிறந்ததாகும். இவ்வாறு வில்டர்ஸ் தனது கட்டுரையில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கெதிரான கருத்தை பதிவு செய்துள்ளார்.

அடுத்த ஆண்டு நெதர்லாண்டில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான தேர்தலுக்கான கருத்து கணிப்பில் இவர் முன்னிலையில் உள்ளார். இவர் வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி மற்றும் வலதுசாரிகளின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கெதிரான போக்கை கையாளுபவர் என்பது பலரும் அறிந்ததே.

வில்டர்ஸ்யின் எழுத்தில் 2008 ஆம் ஆண்டு ‘பித்னா” எனும் ஆவணப்படம் வெளிவந்தது அதில் இஸ்லாத்தையும், குர்ஆனையும் தவறான கண்ணோட்டத்தில் சித்தரித்தது முஸ்லிம்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

செய்தி கண்ணோட்டம்:

முஸ்லிம்கள் இஸ்லாத்தை முழுமையாக வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பின்பற்ற முயல்வதும், அதை நிலைநிறுத்தும் உண்மையான இஸ்லாமிய அரசான கிலாபாவை நோக்கி முயற்சிகள் நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியாததால் இஸ்லாத்திற்கெதிரான இவர்களது கருத்துக்களும், செயல்பாடுகளும் அப்பட்டமாக வெளிபடுவதை காணமுடிகிறது. போர் காரணமாக முஸ்லிம்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுவதை தடுக்கும் வகையிலான இவரது கருத்துக்கு ஐரோப்பியர்களிடையே ஆதரவு கிடைத்து வருகிறது.

http://sindhanai.org

செய்தி பார்வை 29.07.16